நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம் பறிமுதல்!

ஒடிசாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வனச்சரக அதிகாரிகள் பாம்பு விஷம் கடத்தும் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
புவனேஸ்வர் மாவட்ட வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், பாம்பு விஷம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொடிய பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். பாம்பு விஷம் வாங்குபவர்களை போல வனத்துறையினர் நாடகமாடி பாம்பு விஷம் கடத்தும் கும்பலை கைது செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர். இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்ததாக அசோக் கூறினார்.
இருப்பினும் வனத்துறையினரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்த போது, அந்த குடுவைகளில் என்ன இருந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இந்த குடுவையில் மருந்து இருப்பதாக தெரிவித்த கவுதம் என்ற நபர் இதனை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தில் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும், ஒரு லிட்டர் விஷத்தை சேகரிப்பதென்றால் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!