நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஐ.நா. அமைதிப்படை வீரர்களுக்கு 2 லட்சம் இலவச தடுப்பூசிகள் இந்தியா இன்று அனுப்புகிறது

சொந்தக் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதுடன், அண்டை நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது.
நியூயார்க், 

சொந்தக் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதுடன், அண்டை நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 6 கோடி தடுப்பூசிகள் இந்தியாவால் வழங்கப்பட்டிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், ஐ.நா. அமைதிகாப்பு படை வீரர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்கும் என்று அறிவித்தார்.

அதன்படி, ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகள், மும்பையில் இருந்து இன்று (மார்ச் 27) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் ஐ.நா. அமைதிகாப்பு படைகளுக்கு துரிதமாக பகிர்ந்து வினியோகிக்கப்படும்.

அனைத்து ஐ.நா. அமைதிகாப்பு படை வீரர்களுக்கும் இரண்டு ‘டோஸ்’ போடுவதற்கு இந்தியாவின் 2 லட்சம் தடுப்பூசிகள் போதுமானதாகும்.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ஐ.நா.வின் 12 அமைதிகாப்பு நடவடிக்கைகளில் 121 நாடுகளைச் சேர்ந்த 85 ஆயிரத்து 782 வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாரம்பரியமாக இந்த படையில் இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!