நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது மூதாட்டி

பெற்றோரை இழந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு செய்த 73 வயது மூதாட்டி தனக்கு ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் உள்ள 73 வயதுக்கு மேற்பட்ட மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த ருசிகர சம்பவம் மைசூருவில் நடந்துள்ளது.
கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து வேறு சொந்தம் இல்லாமல், தவிக்கும் சிலர் எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதற்கு மைசூருவில், நடந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.


  அதாவது மைசூருவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

அரசு வேலை

  தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கா ஆளாவதாகவும், அதனால் தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  
  எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கிடைத்தது.

தனிமை வாட்டுகிறது

  என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.

  இதனால்தான் நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்கு பொருத்தமாக இருக்கும். அவர் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புகிறேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு ஆரோக்கியமான, திடகாத்திரமான மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் மைசூருவில் ருசிகரமாக பேசப்பட்டது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!