நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிக விலைக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் அதிக தொகைக்கு ஏலம் போனது. 
                              ஆப்பிள்

ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த சார்டர்பீல்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. ஏலம் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவுற்றது. 
ஒற்றை பக்கம் கொண்ட விண்ணப்ப படிவத்தை போர்ட்லாந்தின் ரீட் கல்லூரியில் இருந்து நின்றதும் சமர்பித்தார். முன்னதாக இதேபோன்று ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்ப படிவத்தை 2018 ஆம் ஆண்டு தொழில்நுட்ப தொழில்துறை உரிமையாளர் ஏலத்தில் வாங்கினார்.

இந்த விண்ணப்பம் ஆப்பிள் இணை நிறுவனர் கைப்பட எழுதிய முதல் படிவம் ஆகும். இதனை அவர் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கும் முன் எழுதினார். முன்னதாக ஸ்டீப் ஜாப்ஸ் கையெழுத்திட்ட பிளாப்பி டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!