நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரூ.1 கோடி நன்கொடை தம்பதி தாராளம்

வாஷிங்டன்:

பீஹார் மற்றும் ஜார்க்கண்டில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அமைப்பிற்கு, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

வட அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர்கள், பீஹார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஒரு முன்னாள் மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளனர். இவர்கள் சார்பில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ஒரு இலவச மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதன் ஆதரவாளர்கள்,மாநிலம் முழுவதும் இலவச மருத்துவசேவைகளை வழங்குகின்றனர். இந்த அமைப்பிற்கான நிதி சேகரிப்பு பணிகளை, பீஹார் - ஜார்க்கண்ட் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் வசிக்கும், இம்மாநிலங்களைச் சேர்ந்தோர், இதற்கு நன்கொடை அளிக்கின்றனர்.

இதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி கல்பனா பாட்டியா ஆகியோர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, கூட்டமைப்பின் சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!