நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நுண்ணுயிர்க் கொல்லி பெருங்காயம்

நுண்ணுயிர்க் கொல்லி பெருங்காயம் 

❤பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம். இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. 

❤தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன.

❤பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன.

❤வேர்கள் கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன. அவை தண்டுகளைப் போன்றே பசையையும் விளைவிக்கின்றன. தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக் கொண்டுள்ளன.

பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

மருத்துவப் பயன்பாடுகள்

❤1910-ம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்பானிஷ் ஃப்ளு எனும் நோய் பல்லாயிரக்கணக்கான மக்களை வாட்டி வதைத்தது. அப்போது 'பெருங்காயம்' அந்த நோயை ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு, அதைத் தங்கள் கழுத்தில் தாயத்து போன்று அணிந்து திரிந்தனர் அமெரிக்கர்கள். பெருங்காயத்தைக் 'கடவுளின் அமிர்தம்' என்றே கொண்டாடினர்.

❤1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

❤தைவான் நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசு H1N1 ஐ கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து சேர்க்கைகளை உற்பத்தி செய்வதாக அறிக்கை வெளியிட்டனர்.

❤அமெரிக்க கெமிக்கல் சொசைட்டியின் நேச்சுரல் புராடக்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இந்த சேர்மங்கள் இந்த வகையான ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான "புதிய மருந்து உருவாக்கத்திற்காக உறுதியளிக்கும் முன்னணி சேர்மங்களாகப் பயன்படுத்தப்படலாம்" என்று கூறினர்.

❤செரிமானம் - தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றில் இது செரிமான ஊக்கியாகப் பயன்படுகின்றது மற்றும் இது "மஹாஹிங்" என்று அறியப்பட்ட ஆல்கஹால் அல்லது நீர் டிஞ்சரில் வயிற்றின் மீது பூசப்படுகின்றது

❤ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி - இது ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் சமயங்களில் உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது

❤ குழந்தைகளின் சளிக்கான சுற்றூர்ப்புற மரபுத் தீர்வு: இது நெடியுடைய பசையாகக் கலக்கப்பட்டு ஒரு பையில் அல்லற்படும் குழந்தையின் கழுத்தினைச் சுற்றிலும் தொங்கவிடப்படுகின்றது.

❤நுண்ணுயிர்க் கொல்லி - பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதுவே பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள். கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள்.

அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது. காரம் மிக அதிகமாக இருக்கும். ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாது. இதனால் பெருங்காய தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.

சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன. மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும். இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது.

பெருங்காயத்தின் கழிவுகள், குப்பைகள், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றைக் கலந்து பெருங்காயம் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார்கள். இந்தக் கழிவுகளுடன் வாசனைக்காக சிறிது எசன்ஸை மட்டும் கலந்து விடுவார்கள். தரமற்ற இந்த விற்பனை தொடராமல், உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும்.

எது #ஒரிஜினல்❓

இத்தனை மருத்துவ பயன்கள் உள்ள பெருங்காயத்தை கலப்படம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தவிர்க்க வேண்டியதில்லை.
நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் / பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துதான் வாங்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் பெருங்காயம் உண்மையானது தானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும். கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும். இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம்.
சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை மட்டுமே பயன்படுத்துவோம். பால் பெருங்காயத்தில் கோதுமை, கருவேல பிசினின் கலப்பு குறைவாகவே இருக்கும்.
சில லேகியங்கள், சூரணங்கள் தயாரிப்பில் பால் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எனவே, தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத்தை வாங்கிப் பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப் பொடியில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கதம்பப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது. சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கண்ணாடிக்
கொள்கலன்களில் அடைத்து வைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவ குணத்தையும் பாதுகாக்கலாம்; இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும்.
இருப்பினும், அதன் துர்நாற்றம் மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணெய் அல்லது நெய்யில் சூடாக்கும் வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நினைவூட்டுகின்றது.
❤பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்
சமையல் செய்யும்போது வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.
மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

பெருங்காயத்தில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடி பாதுகாக்கும், பற்களை வலுவாக்கும் மற்றும் இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு உட்பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கும்.
அஜீரணத்துக்கு அருமருந்து பெருங்காயம். வாய்வை ஏற்படுத்தும் வாழை, பருப்புகள், கடலைகள், பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சமைக்கும்போது தவறாமல் பெருங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும்.
பெருங்காயம் அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்வதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.தினமும் காலையில் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரைக் குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குடித்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
பல சைவ மற்றும் துவரம்பருப்பு உணவுகளில் சுவை மற்றும் மணம் சேர்க்க மற்றும் வாயுத் தொல்லையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றது
பெருங்குடல் காற்றுநீக்கி
பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்
காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும்.
ஒருவர் தினமும் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், அவர்களின் எலும்புகள் வலிமையடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தினமும் பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடித்து வந்தால், கண் வறட்சி தடுக்கப்பட்டு, கண்கள் பளிச்சென்று பிரகாசமாக தெரியும்.
நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து.
சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.
மிகவும் பழமையான மருந்தான பெருங்காயம் பெண்களுக்கு அதிசிறந்த மருந்தாக திகழ்கிறது. சீரற்ற மாதவிடாய்ப் பிரச்னை மற்றும் அதுசார்ந்த வலியைப் பெருங்காயம் சரிசெய்கிறது. சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
மாதவிலக்கு சரியாக வராமலும், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.
பெருங்காயத்தில்உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.
மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.
பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.
தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு.
மலச்சிக்கலை சரியாக்கும். நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு.
பெருங்காயத்தை நீரில் போட்டு வேக வைக்கும் போது, அதில் நீர்ப்பெருக்கி பண்புகளை உற்பத்தி செய்யப்படுகிறது. அது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்து, அனைத்துவிதமான சிறுநீரக தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பளிக்கும்.
ஆஸ்துமா, வறட்டு இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளில் இருந்து விடுபட, தலைவலியைப் போக்க, முகப்பருக்களைக் குறைக்க, ரத்த அழுத்த அளவை சீராக்க எனப் பெருங்காயம் மருத்துவ ரீதியாக பேருதவி செய்கிறது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!