நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செப்டம்பரில் 2-வது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

வரும் செப்டம்பரில் தமது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவோவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்சுடன் இணைந்து சீரம் இந்தியா தயாரிக்கிறது. 


இந்த தடுப்பூசியின் சோதனை ஒரு வாரத்திற்கு முன் துவங்கி விட்டதாக அடார் புனேவாலா தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க, பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசிக்கு 89 சதவிகித செயல்திறன் இருக்கிறது எனவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் மாதத்திற்குள் கோவோவாக்ஸைத் தொடங்கும் என நம்பிய பூனவல்லா இன்று பிற்பகல் இது செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று டுவீட் செய்துள்ளார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!