நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவக்கம்: முன் பதிவு ஏப்., 1-ம் தேதி துவங்குகிறது

ஜம்மு - காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை ஜூன், 28ல் துவங்குகிறது.
ஜம்மு,

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.  இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்., 1-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - -காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளில், இந்த முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 13 வயதுக்குட்பட்டவர்களும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணியரும், யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர்  தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!