நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முதல்முறையாக வெளிநாட்டு பயணத்தில் புதிய விமானத்தை பயன்படுத்திய மோடி

முக்கிய தலைவர்களுக்கான புதிய விமானம் ‘பி 777’ ஆகும்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். இந்த பயணத்தில் அவர் பயன்படுத்தியது, முக்கிய தலைவர்களுக்கான புதிய விமானம் ‘பி 777’ ஆகும். இந்த விமானத்தை போயிங் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம்தான், இந்திய அரசிடம் வழங்கியது.

இந்த விமானம் ‘ஏர் இந்தியா ஒன்' என அழைக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி உள்நாட்டு பயணத்துக்கு பயன்படுத்தி வந்தார். முதல் முறையாக இப்போது வெளிநாட்டு பயணத்துக்கு பயன்படுத்தி உள்ளார்.

இந்த விமானமும், இதேபோன்ற மற்றொரு விமானமும் பயணிகள் விமானங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், போயிங் நிறுவனத்திடம் 2018-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்கான சிறப்பு விமானங்களாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு விமானங்களும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு உள்ளிட்ட நவீன அம்சங்களை கொண்டிருப்பது சிறப்பு.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!