நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலும்புகளை பலப்படுத்தும் பிரண்டை சூப்

பிரண்டை கை வலி, கால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து. பிரண்டை எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது.
                        பிரண்டை சூப்

தேவையான பொருட்கள்

பிரண்டைத் தண்டு - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 10 எண்ணம்

வெள்ளைப் பூண்டு - 3 பற்கள் 
(பெரியது)

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 2 கொத்து

கறிவேப்பிலை - 2 கீற்று

உப்பு - தேவையான அளவு


செய்முறை

பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் பிரண்டையில் உள்ள நீரை வடிகட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.

பரிமாறும் போது கொத்தமல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சுவையான பிரண்டை சூப் தயார்.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

குறிப்பு

பிரண்டையை தேர்வு செய்யும் போது இளம்பச்சை நிறத்தில் உள்ள இளந்தண்டினைத் தேர்ந்தெடுக்கவும். இளந்தண்டு கைகளில் அரிப்பினை அவ்வளவாக ஏற்படுத்தாது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!