நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

130 கோடி போலி அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் செயல்பட்டு வந்த சுமார் 100 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்து இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலி அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பரவிய 1.2 கோடி போலி தகவல்கள் அடங்கிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், இதுபற்றிய போலி தரவுகள் அதிக எண்ணிக்கையில் பரவி வந்தது.

பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போலி செய்தி பரவலை எவ்வாறு கையாள்கின்றன என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விரைவில் விளக்கமளிக்க இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது போலி அக்கவுண்ட் நீக்கம் பற்றிய தகவல்களை பேஸ்புக் வெளியிட்டு உள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!