Posts

Showing posts from March, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இவை எல்லாம் கனவில் வந்தால் நீங்கள் பணக்காரர் ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தமாம்!!!

Image
நாம் அனைவரும் தூங்கும்போது கனவுகளைப் பார்க்கிறோம். அவற்றில் சில கவர்ச்சிகரமானவை, மர்மமானவை, பயமுறுத்தும் கனவுகள் என பல வகையான கனவுகள் வருகின்றன.  ஆனால் நாம் கனவு கண்ட உடனேயே 50% கனவுகள் மறந்துவிடுமாம்.. காலையில் எழும் போது கிட்டத்தட்ட 90% கனவுகள் மறந்து வெறும் 10% கனவுகள் மட்டுமே நினைவில் இருக்கும் என்று கனவுகள் பற்றி ஆராயும் ஒரு சில மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கனவுகளைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? இந்த கனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றன என்று நம்பப்படுகிறது. நல்ல கனவுகள் மோசமான முடிவுகளையும், கெட்ட கனவுகள் நல்ல பலனையும் தருகின்றன என்று ஸ்வ்பான் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு கனவுகள் இருந்தால், நீங்கள் அவர்களால் தொந்தரவு செய்யக்கூடாது. இன்று சில கனவுகளின் அர்த்தத்தை பார்க்கலாம்.. மக்கள் தற்கொலை செய்து கொள்வதை போல கனவு காண்பது புனிதமானது என்று சொல்லலாம். இந்த கனவுகள் உங்கள் வயது அதிகரித்துள்ளது என்பதையும், உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்யும் என்பதையும் குறிக்கிறது. கனவு சாஸ்திரத்தின் படி,

இது தான் கடவுள் சக்தியாம்! மக்கள் முகத்தின் மீது அமர்ந்து ....மதபோதகரின் அருவருக்கத்தக்க செயல்.....

Image
தென்னாப்பிரிக்காவில் ஒரு மதபோதகர், மக்கள் முகத்தின் மீது அமர்ந்து செய்யும் அருவருக்கத்தக்க செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்து பெனிலோப் என்ற மத போதகர் தன்னிடம் வரும் பக்தர்களின் ஆன்மீக மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் குணப்படுத்தும் செயல்முறையாக மக்கள் முகங்களின் மேல் உட்கார்ந்து குசு விடுவாராம். இதுதொடர்பான புகைப்படம் இணையதளங்களில் பரவியதால் அந்த மதபோதகர் வைரலானார். தான் இவ்வாறு செய்வதால் பல அற்புதங்களைச் செய்ய முடியும் என்றும், குணப்படுத்தும் சக்தி உடலில் நுழைந்து அதன் வேலையைச் செய்யக்கூடிய வகையில் நபரின் நாசிக்கு அருகில் இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார். இது கடவுளின் சக்தியின் நிரூபணம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.. ஆச்சரியப்படும் விதமாக, அவரது வணிகம் வளர்ந்து வருகிறது.. 'புனித குசுக்களை' முகத்தில் பெற நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருப்பது மட்டுமல்லாமல், சிலர் அவரை சந்திக்க இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள். அவரது படங்கள் வைரலாகிவிட்ட பிறகு, பல போதகர்கள் அவரது நடத்தையை கண்டித்து வருகின்றனர். மேலும் அந்த பாஸ்டர், மக

மூளைச்சாவு அடைந்த இளைஞன் ; அக்கா சொன்ன ஒரு வார்த்தையில் நடந்த அதிசயம்!!¡

Image
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் லிவிஸ் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட விபத்த்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளன்னர். இதையடுத்து, லிவிஸ் 4 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் தங்கள் மகனின் நிலைமையை பார்த்து மனவேதனையில், சம்மதம் தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்புகளை எடுப்பதற்க்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகிய நிலையில் லிவிசின் அக்கா ஜேட், ICUவில் இருக்கும் தனது தம்பியின் அருகில் அமர்ந்து அவரது கையை பிடித்து, இதுதான் தான் கட

‘எவர் கிவன்’ கப்பலுக்கு GIF வெளியிட்ட கூகுள்

Image
Also read :   1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்?

மருத்துவஅளவீடுகள் பற்றிய விழிப்புணர்வுபதிவு..

Image
# மருத்துவஅளவீடுகள் பற்றிய விழிப்புணர்வுபதிவு.. 1.இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45 என்ற அளவில் இருக்கும். 2.சிறுநீரின் pH அளவு 4.5 - 8.0 என்ற அளவில் இருக்கும். 3.இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும். 4.இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும். 5.இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும். 6.இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும். 7.உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும். 8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும். 9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும். 10.இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும். 11.நடுவயதினரின்

உடல் பருமன் கொண்டவர்களே ?உஷாராக இருங்க . ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!!!!

Image
உலக அளவில் உடல் பருமன் பிரச்சனையால் உயிர் இழப்பவர்கள் அதிகமாக உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலவகை அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகமாகிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உலகில் பெரும்பாலான இறப்புகளுக்கு புகைப்பழக்கத்தை விட உடல் பருமன் பிரச்சினை தான் முக்கிய காரணமாக உள்ளதாக ஸ்காட்லாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மரணம் அடைந்தவர்களின் தரவுகளை ஆராய்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உடல் பருமனால் உயிரிழந்தவர்கள் தான் அதிகம். உடல் பருமன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் குழந்தை பெறும் பாக்கியம் குறைந்து கொண்டே வருகிறது. உடல் பருமன் காரணமாக இதய நோய் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உங்கள் உணவு பழ

1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்?

Image
ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அழகான பூக்களை நோக்கும்போது புலப்படாத அச்சம், வரலாற்றுத் தரவுகளை ஆராயும்போது ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முன்கூட்டியே பூக்கள் மலர்வது புவி வெப்பமயமாகி வருவதன் வெளிப்பாடாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். Also read :  சுற்றுச்சூழலை காக்க கூகுள் மேப்பில் புதிய அப்டேட்..!

ரஷியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாரிப்பு

Image
உலகிலேயே முதல் முறையாக ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கோ , சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.‌ இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷியாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ரஷிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை

கொரோனா அச்சுறுத்தல்: விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு

Image
கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக விமான நிலையங்களில் இன்று முதல் (வியாழக்கிழமை) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கொரோனாவின் 2 வது அலை என்று இதனை கூறுகிறார்கள். தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமான நிலையங்களிலும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விமான பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  மேலும், விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Also read :   மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Image
மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அசாமிலும் 39 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்தது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கிற 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இதுவரை இல்லாத வகையில் கடும்போட்டி நிலவுகிறது. இந்த 30 தொகுதிகளில் மேற்கு வங்காளத்தின் கவனத்தை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்துள்ள தொகுதி நந்திகிராம்தான். இங்குதான் மம்தா களம் இறங்கி உள்ளார். அவருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தலைவராக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, தற்போது பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவேந்து அதிகாரிக்கும் இடையேயான போட்டி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில்

எலும்புகளை பலப்படுத்தும் பிரண்டை சூப்

Image
பிரண்டை கை வலி, கால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து. பிரண்டை எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது.                         பிரண்டை சூப் தேவையான பொருட்கள் பிரண்டைத் தண்டு - 1 கட்டு சின்ன வெங்காயம் - 10 எண்ணம் வெள்ளைப் பூண்டு - 3 பற்கள்  (பெரியது) சீரகம் - 1 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் கொத்தமல்லி இலை - 2 கொத்து கறிவேப்பிலை - 2 கீற்று உப்பு - தேவையான அளவு செய்முறை பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமி

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889

Image
300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது.                       ஈபிள் கோபுரம் 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது. இக்கோபுரம் அதன் உச்சியிலுள்ள 20 மீட்டர் உயரமுள்ள தொலைகாட்சி ஆண்டனாவை சேர்க்காமல், 986 அடி உயரமானது. 10 ஆயிரம் டன்கள் எடை கொண்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது உலகின் அதிக உயரமான கோபுரம் இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக ஏழு ஆண்டுகளுக்கு ஒருமு

குழந்தைக்கு வாயாடி பட்டம் சூட்டாதீங்க...

Image
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். 5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும். `கண்ணாடி குவளையை கையில் தூக்காதே.. அது கீழே விழுந்தால் உடைந்துவிடும்..' என்று குழந்தைகளிடம் சொன்னால், சில குழந்தைகள் `அதெல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலையை நீங்கள் பாருங்கள்' என்று சொல்லும

இந்தியாவில் ஊரடங்கு எதிரொலி - கூகுளில் அது பற்றிய தேடல் 140 சதவீதம் அதிகரிப்பு

Image
கடந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான பணிகள் ஆன்லைன் மயமாகி விட்டது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றுவது (work from home jobs) குறித்த தேடல்கள் கூகுளில் கடந்த ஆண்டு 140 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் பலருக்கும் அதிகரித்து இருப்பதால், இந்தியர்கள் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற துவங்கி உள்ளனர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ஆன்லைன் மருத்துவம் (online doctor consultation) பற்றிய தேடல் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.  ஆன்லைன் தேடல் சதவீதம் மணிப்பூர், பீகார் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நகரங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 2020 ஆண்டு ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  கல்வி சார்ந்த தேடல்களில் கல்விமுறை கடந்து தொழில்முறை, புதிய திறன் வளர்த்தல், தொழில் துவங்குதல், வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகள் பற்றி இந்தியர்

புது லோகோ அறிமுகம் செய்த சியோமி

Image
சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                   சியோமி லோகோ சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார். புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இதே லோகோ பிளாக் மற்றும் சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சியோமி தெரிவித்து உள்ளது.  லோகோ அறிமுகம் செய்ததுடன், சியோமி நிறுவனம் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் முதற்கட்டமாக 10 பில்லியன் யுவான்களை முதலீடு செய்ய இருக்கிறது. இதுதவிர அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. சியோமியின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத

அனல் பறக்கும் வெயில்...சமாளிப்பது எப்படி?

Image
தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:- தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், தொழில்புரிவோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்பட அனைத்து தரப்பினரும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவியாய், தவித்து வருகின்றனர். ஆகவே இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:- அனைவரும் வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். அதற்கேற்ப பயணங்களை அமைத்துக்கொள்ளலாம். கோடைகாலத்தில் மிருதுவான வெள்ளாடை, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். கருப்பு, கனமான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும் கடினமான வேலையையும் தவிர்த்தல் வேண்டும். வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது கண்களை பாதுகாக்க கண்ணாடி, உடலைப் பாதுகாக்க குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்வது மிக

சுற்றுச்சூழலை காக்க கூகுள் மேப்பில் புதிய அப்டேட்..!

Image
கூகுள் நிறுவனம் தற்போது சுற்றுச்சூழலை காக்க ஓர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல தரப்பினரிடம் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாகன ஓட்டுனர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் முக்கிய செயலில் கூகுள் மேப். கூகுள் மேப் மூலமாக உலகின் எந்த மூலையிலும் வாகனங்கள் பயணிக்க வசதி செய்து தரப்படும். சாட்டிலைட் தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கூகுள் மேப் கொண்டு கார் டிரைவர்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், கரியமில வாயுவின் அதிகரிப்பு மற்றும் துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தவிர்க்க உலக நாடுகள் பல, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை இட்டு வருகின்றன. புகழ்பெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் வல்லரசு நாடுகள் பல கையெழுத்திட்டுள்ளன. தனியார் நிறுவனங்களும் இயற்கை வளத்தையும் சுற்றுச் சூழலையும் காக்க ஆவண செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ள

ரூ.1 கோடி நன்கொடை தம்பதி தாராளம்

Image
வாஷிங்டன்: பீஹார் மற்றும் ஜார்க்கண்டில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அமைப்பிற்கு, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். வட அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர்கள், பீஹார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஒரு முன்னாள் மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளனர். இவர்கள் சார்பில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ஒரு இலவச மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் ஆதரவாளர்கள்,மாநிலம் முழுவதும் இலவச மருத்துவசேவைகளை வழங்குகின்றனர். இந்த அமைப்பிற்கான நிதி சேகரிப்பு பணிகளை, பீஹார் - ஜார்க்கண்ட் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் வசிக்கும், இம்மாநிலங்களைச் சேர்ந்தோர், இதற்கு நன்கொடை அளிக்கின்றனர். இதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி கல்பனா பாட்டியா ஆகியோர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, கூட்டமைப்பின் சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Also read :  இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!

Image
சென்னை :  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக

வாழ்க்கையின் தத்துவம்

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ  பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்  செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை  மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்  பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை  வேளையில் பறவைகளுக்கு  இனிப்பு பிஸ்கட்கள் வழங்க  வீண் விரயம் கட்டுப்படும். (3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,  சோர்வு போன்றவை  நாள் முழுதும் இருப்பின்  இரவு படுக்கும் பொழுது  தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து  கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.  அதை குடிக்க கூடாது. (4) காரணமில்லாத பய உணர்வு  இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்  ஸ்டீல் வளையம் ஒன்று  மாட்டி வர பய உணர்ச்சிகள்  குறையும். (5) தற்கொலை எண்ணங்கள்  மேலும் வாழ பிடிக்காதது  போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி  கம்பியால் மூக்கில் சிறு துளை போட

இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’

Image
காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 'காட்ஸில்லா' (2014), 'காங்: தி ஸ்கல் ஐலேண்ட்' (2017), 'காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்' (2019) ஆகிய படங்கள் அடக்கம். இப்படங்களின் தொடர்ச்சியாகத் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆடம் விங்கார்ட் இயக்கினார். கரோனா அச்சுறுத்தலால் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட இப்படம் ஒருவழியாக திரையரங்குகளுகளில் வெளியானது ஹாலிவுட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த புதன் (24.03.2021) அன்று வெளியான இந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவிட்ட சூழலில் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் முதல் வாரத்தில் ரூ.28.96 கோடி வசூல் செய்துள்ளது. இதில் 60 சதவீத தென்னிந்தியத் திரையரங்

பருப்பு, இஞ்சியுடன் ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் இப்படி செய்து பாருங்கள்!

Image
எலுமிச்சை ரசம் ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள். எப்போதும் புளி, தக்காளி சேர்த்து ஒரேபோன்ற ரசம் வைத்து சலித்துவிட்டதா? கவலையே வேண்டாம். பருப்பு, இஞ்சி கலவையோடு சுவையான எலுமிச்சை ரசம் ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்வீர்கள். தேவையான பொருள்கள் பருப்பு சமைக்க துவரம் பருப்பு – ¼ கப் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை தண்ணீர் – ¾ முதல் 1 கப் அரைக்க நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – ⅓ கப் சீரகம் – 2 டீஸ்பூன் கருப்பு மிளகு – ½ டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் – 1 அல்லது 2 இஞ்சி – ½ இன்ச் பூண்டு – 4 முதல் 5 பற்கள் தாளிக்க நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி உலர்ந்த சிவப்பு மிளகாய் – 1 முதல் 2 பெருங்காயத்து – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் தண்ணீர் – 1 முதல் 1.5 கப் எலுமிச்சை சாறு – 2.5 முதல் 3 டேபிள்ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்) உப்பு – தேவையான அளவு சில கொத்தமல்லி இலைகள் செய்முறை பருப்பு வேகவைக்க துவரம் பருப்பை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு

டெலிகிராமில் உங்கள் தொலைபேசி எண்ணை மறைக்க இதைச் செய்யுங்கள்!

Image
உங்கள் டெலிகிராம் எண்ணை சில எளிய செயல்முறைகளில் எவ்வாறு மறைக்கலாம். டெலிகிராம் ஏராளமான அம்சம் நிரம்பிய செய்தியிடல் பயன்பாடு. அதில் பல தனியுரிமை சார்ந்த அம்சங்கள் உள்ளன. டெலிகிராமின் பல திறன்களில் ஒன்று, நீங்கள் செய்தி அனுப்பும் நபர்களிடமிருந்தோ அல்லது உங்களுடன் பொதுவான குழுக்களில் இருப்பவர்களிடமிருந்தோ தனிப்பட்ட விவரங்களை மறைப்பதுதான். உங்கள் தொலைபேசி எண்ணை மறைப்பது டெலிகிராமில் அந்நியர்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணைப் பெறுவதையும் அல்லது தளத்திற்கு வெளியே உங்களைத் தொடர்புகொள்வதையும் தடுக்கிறது. உங்கள் டெலிகிராம் எண்ணை சில எளிய செயல்முறைகளில் எவ்வாறு மறைக்கலாம் என்பது இங்கே. டெலிகிராமில் உங்கள் தொலைபேசி எண்ணை எவ்வாறு மறைப்பது ஸ்டெப் 1: டெலிகிராமை திறந்து, அமைப்புகளுக்குச் செல்லவும் டெலிகிராம் பயன்பாட்டைத் திறந்து வலதுபுறத்திலிருந்து ஹாம்பர்கர் மெனுவை வெளியே இழுக்கவும். டெலிகிராம் அமைப்புகளை உள்ளிட, அமைப்புகள் (Settings) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டெப் 2: தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்குச் செல்லவும் அமைப்புகள் கீழ், ‘தனியுரிமை மற்றும் பாதுகாப்

ஆன்லைன் வழியாக COVID-19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

Image
ஆரோக்யா சேது ஆப், கோவின் ஆப் மற்றும் கோவின் வலைத்தளம் வழியாக கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்குவது எப்படி, இதோ எளிய வழிமுறைகள் மற்றும் சில நிபந்தனைகள்.   COVID-19 தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் இதை ஆப் மற்றும் வலைத்தளம் வழியாக செய்யலாம் கொரோனா தடுப்பூசி போடும் செயல்முறை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முன்கள தொழிலாளர்களுக்குப் பிறகு, இப்போது தொற்று உள்ளதாக கருதப்படும் அறிகுறிகளை கொண்ட மூத்த குடிமக்களும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவிட்-19 தடுப்பூசியை பெறுகிறார்கள். தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதும் முக்கியம், ஏனெனில் இது வரும் மாதங்களில் சர்வதேச பயணம் மற்றும் பல விஷயங்களுக்கு தேவைப்படலாம். ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், அதை போட்டுக்கொண்டதற்கான கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை CoWin வலைத்தளம் அல்லது ஆப் மற்றும் ஆரோக்யா சேது ஆப் வழியாக நிகழ்த்தலாம். ஒருவேளை கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் குழ

கப்பல் போக்குவரத்து தொடக்கம்: சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை திரும்பியது

Image
கப்பல் போக்குவரத்து தொடங்கியதையடுத்து சூயஸ் கால்வாயில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்' என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது புழுதி புயல் காரணமாக குறுக்கே திரும்பி கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது. இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.‌ இதனிடையே சகதியை அகற்றும் ராட்சத எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக இரவுப்பகலாக நடந்து வந்தன. சரியாக ஒரு வாரம் நடந்த தீவிர மீட்பு பணிய

தமிழக விஞ்ஞானியின் பெயர் சூட்டி பெருமைப்படுத்திய நாசா: நிலவில் விவசாயம் செய்ய உதவும் பாக்டீரியாவை கண்டுபிடித்த தமிழக விஞ்ஞானி

Image
நட்புன்னா என்னனு தெரியுமா?’ என்று கேட்டால், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தமிழகத்தில் வாழும் தன் ஆத்மார்த்த நண்பன் விஞ்ஞானி சயீத் அஜ்மல் கான் பெயரைச் சொல்கிறார். சும்மா வாய் வார்த்தைக்கு அல்ல தன்னுடைய உயிரியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கே நண்பனின் பெயரைச் சூட்டி நட்பை நிலைநாட்டி இருக்கிறார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாக நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘மித்திலோ பாக்டீரியாசியே’ என்ற வகை பாக்டீரியாவுக்கு ‘மித்திலோபாக்டீரியம் அஜ்மலீ’ என்ற பெயரை வழங்கியவர், நாசாவில் 25 ஆண்டுகளாக உயிரியல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் கஸ்தூரி வெங்கடேஸ்வரன். அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சிலிஸ் நகரில் வசித்து வரும் அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக அளித்த பேட்டி: விண்வெளி நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாவுக்கு பேராசிரியர் சயீத் அஜ்மல் கானின் பெயரை சூட்டியது ஏன்? புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் போது அவற்றுக்கு அதிசிறந்த ஆளு மைகளின் பெயரைச் சூட்டுவது வழக்கம். அந்த வகையில், இதற்கு முன்னால் எங்களுடைய குழு கண்டுபிடித்த பா

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்

Image
அழுவதும் ஒரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானது. இது அவரது மனதை அமைதிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சிரிப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லது படித்திருக்கிறோம். அது உண்மையும் கூட. அதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அழுவதாலும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அழுவதும் ஒரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானது, இது அவரது மனதை அமைதிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று கூறியுள்ள நம் முன்னோர்கள், கவலைகளை சுவற்றிடமாவது சொல்லி அழு எனவும் கூறியிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும் ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருக்கும்போது, ​​அவரது உடலில் பல நச்சுகள் உருவாகின்றன. இந்த நச்சுகள் உடலில் இருந்து வெளியே வரவில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அழுவதன் மூலம், இந்த நச்சுகள் உடலில் இருந்து மெதுவாக வெளியேற்றப்பட்டு, மனிதனின் மன அழுத்தமும் குற

சாண்ட்விச், தந்தூரிக்கு ஏற்ற டேஸ்டியான புதினா சட்னி ரெடி!

Image
சாண்ட்விச், தந்தூரி, கபாப், ஃப்ரைஸ் என அணைத்து ஸ்நாக்ஸ் வகைகளுக்கு ஏற்ற டேஸ்டி புதினா சட்னி. மாலை வேளை ஸ்நாக்ஸ் வகைகளை ஸ்பெஷலாக்கும் ருசியான புதினா சட்னி 15 நிமிடத்தில் ரெடி. ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு சிறிய ஜாடியில் அரைத்த சட்னியை மாற்றி, காய்கறி கட்லெட், பிரட் பக்கோடா, பிரஞ்சு ஃப்ரைஸ், சீஸ் பால்ஸ், கபாப், பன்னீர் டிக்கா போன்ற ஸ்நாக்ஸ் உணவுகளுடன் இணைத்து சாப்பிடலாம். காற்று புகாத ஸ்டீல் பாக்சில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையான பொருள்கள் : புதிய புதினா இலைகள் – 2 கப் நறுக்கிய பச்சை மிளகாய் – 1 முதல் 2 நறுக்கப்பட்ட இஞ்சி – 1 இன்ச் சாட் மசாலா – 1/2 டீஸ்பூன் அல்லது  சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை : புதினா இலைகளைத் தண்ணீரில் நன்றாக அலசி, அதனோடு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையோடு சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். உங்களிடம் சாட் மசாலா இல்லையென்றால், ¼ டீஸ்பூன் உலர் மாம்பழ தூள் (அம்ச்சூர் தூள்), ¼ டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் மற்றும

கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் ?

Image
கோயில்களில் கடவுள் சிலைகளை பெரும்பாலும் கருங்கல்லில் வடிக்கின்றனர் அது ஏன் என்பது பற்றி சிறு விளக்கம் : ஒரு கல்லில் சிலை வடிப்பது எளிதான விஷயம் அல்ல. முறையான விரதம் இருந்து, அதற்கான கல்லினை தேர்வுச் செய்து, அந்த கல்லின் தனித்துவம் உணர்ந்து செய்ய வேண்டும். உழியினால் கல்லினை செதுக்கும் போது, ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் அந்த கல் முற்றிலுமாக உடைந்து விடும். ஆகம விதிப்படி முறையாக பூஜைகள் செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில் நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை நம்மால் உணரலாம். பெரும்பாலும் தெய்வச் சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது கருங்கல்.  கருங்கல் என்பது பஞ்ச பூதங்களையும் அடக்கும் தன்மையுள்ளது. இது வேறு எந்த உலோகத்திற்கும் கிடையாது. * நீர்* கல்லில் நீர் உள்ளது. எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம். * நிலம்*

நாய்கள் மற்றும் குதிரைகளுக்கும் ஓய்வூதியம் கொடுக்கும் நாடு எது தெரியுமா

Image
போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. சேவை செய்யும் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும் போது சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகின்றன. ஓய்வுக்குப் பிறகு அரசாங்கம் அந்த நாய்கள் மற்றும் குதிரைகளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தத்தெடுக்க விரும்பும் நபர்களிடம் ஒப்படைக்கப்படைக்கின்றன. இதனால், அதன் சமூக ப

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!