நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் வெற்றி; வாக்களிப்பில் பங்கேற்காத இந்தியா!

 மனித உரிமை மீறல் விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றது. இது உலக அரங்கில் இலங்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.


இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இலங்கை இறுதிக்கட்டப் போருக்கு பின் அந்நாட்டில் தமிழர் நடத்தப்படும் விதம் உள்ளிட்ட பிரச்னைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.


அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், கியூபா உள்ளிட்ட நாடுகள், இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.

மனித உரிமை மன்றத்தில் 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் பாதிக்கு மேற்பட்ட, அதாவது 24 நாடுகள் ஆதரிக்கும் பட்சத்தில் தீர்மானம் வெற்றிபெறும். அந்த வகையில், இலங்கை அரசுக்கு எதிரான இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று இலங்கை கூறி வந்தது. இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆதரவு கோரியிருந்தார்.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்த அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது எதிர்த்து வாக்களிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் ஜெயந்த் கொலம்பகே, தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும் இவரது பேச்சு குறித்து இந்திய தரப்பில் எந்த எதிர்வினையும் வெளியாகவில்லை. அதேவேளையில், இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம், சர்வதேச அரசியல் சூழல், உள்நாட்டு அரசியல் நிலவரம் என பல அம்சங்களை கருத்தில்கொண்டே இவ்விவகாரத்தில் இந்தியாவின் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதைப் புறக்கணிக்கும் முடிவை இந்திய தரப்பு எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.



ALSO READ :  உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்தியாவில்!' - புதிய ஆய்வறிக்கையில் தகவல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!