நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொற்றுநோய்க்கு மத்தியில் தனிமையில் இருந்து விடுபட அரவணைக்கும் இலவச ஆட்டுப்பண்ணையை திறந்த ஜெர்மன் குடும்பம்!

தனிமையான வாழ்க்கையில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே ஒரு ஆறுதலாகவும், அரவணைக்கும் ஒரு தோழனாகவும் உள்ளது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கி உள்ளது. மேலும், சமூக விலகல் மற்றும் தனிமை காரணமாக அதீத மனஅழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். இது போன்ற தனிமையான வாழ்க்கையில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே ஒரு ஆறுதலாகவும், அரவணைக்கும் ஒரு தோழனாகவும் உள்ளது. 5 அறிவுள்ள ஜீவன்களாக இருந்தாலும் அவற்றின் அரவணைப்பு சக நண்பர்கள் கொடுக்கும் பாசத்தையும் தாண்டி மதிப்புமிக்கதாக உள்ளது.

அந்த வகையில், ஜெர்மன் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மனிதத் தொடர்பை இழந்து தனிமையில் சிக்கியுள்ள நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு இலவச அரவணைக்கும் ஆட்டுப் பண்ணையை ஒரு குடும்பம் திறந்துள்ளது. இது குறித்து பண்ணையின் உரிமையாளர் லெக்சா வோஸ் கூறியதாவது, "எங்களிடம் அற்புதமான ஆடுகள் உள்ளன. பார்வையாளர்கள் தங்களை சந்திப்பதை பண்ணை ஆடுகள் மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார். மேற்கு ஜெர்மனியில் ஹட்டிங்கனுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் கல்வித் திட்டத்தை நடத்தி வரும் லெக்சா வோஸ், மக்களை விலங்குகளுடன் நெருங்கி வர எப்போதும் ஊக்குவித்து வருகிறார்.

மேலும் அவர் தெரிவித்தாவது, "கவனிக்கப்படாத ஆடுகளை மக்கள் பார்வையிட நான் அனுமதிக்கிறேன். இயற்கையில் அவர்களுடன் ஒரு அற்புதமான நேரத்தை நீங்கள் செலவழிக்கலாம். முகக்கவசங்கள் மற்றும் சமூக விலகல் போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளில் இருந்தும் விலகி இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த பண்ணைக்கு வரவிரும்பும் பார்வையாளர்கள் ஒரு சந்திப்பிற்கு முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் விரும்பிய ஆடுகளுக்கு எவ்வளவு அருகில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளார். பார்வையிடும் செஷன் இலவசமாக இருந்தாலும் பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் விரும்பினால் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பண்ணைக்கு வந்த ஒரு பார்வையாளர் தெரேஸ் பிஃபெர், விலங்குகளுடன் ஏற்படும் ஒரு சந்திப்பை மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், "இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறோம். பெருந்தொற்று காரணமாக எங்கள் நாட்டில் எப்போதும் சமூக தொலைவு கடைபிடிக்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதானால், நான் எப்போதும் செம்மறி மேய்ச்சல் நிலங்களில் நடந்து செல்வேன். அங்கிருக்கும் ஆடுகள் என்னைவிட்டு ஓடிவிடுகின்றன. ஆனால் இந்த பண்ணையில் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. இந்த அரவணைப்பு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று, தற்போது ஜெர்மனியில் 2,578,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. உலகளவில் தற்போதுவரை கொரோனவால் 120,493,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 2,666,682 ஆகும். மேலும், 97,037,800 பேர் தற்போதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!