நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய்கிரக தண்ணீர் எங்கும் செல்லவில்லை, மண்ணுக்கடியில்தான் உள்ளது புதிய ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மேற்பரப்புக்கு அடியில் கனிமங்களுடன் புதைக்கப்பட்டு உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வாய் கிரகம்ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2-வது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது. பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள இடைவெளி 546 கோடி கிமீ.

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கருத்தப்படும் செவ்வாய் கிரகமானது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக இருக்கும் கோளாகும். பூமியைப் போலவே இங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும், வளிமண்டலம் அழிந்ததன் காரணமாக அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை அமைப்புகள், நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செவ்வாய் கிரகத்தில் நடந்த ஆய்வுகள் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளன. இதன் காரணமாகவே பல்வேறு உலக நாடுகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. 

இந்த நிலையில் செவ்வாய் கிரகம் தனது வளி மண்டலத்தை (காற்று மண்டலத்தை) இழக்க காரணமாக, சூரிய காற்று இருந்திருக்கக்கூடும் என்று கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆய்வைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். 

செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் இருந்த் நீரை குறைந்த ஈர்ப்புவிசை காரணமாக விண்வெளி ஈர்த்து விட்டதாக கூறபட்டது. ஆனால் நாசாவால் மேற்கொள்ளபட்ட ஒரு புதிய ஆய்வில் செவ்வாய் கிரக தண்ணீர் நீர் எங்கும் செல்லவில்லை, செவ்வாய்கிரக மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கனிமங்களுக்குள் சிக்கியுள்ளது என்று கூறுகிறது.

புதிய ஆய்வறிக்கையின் முதன்மை எழுத்தாளர் ஈவா ஷெல்லர் கூறியதாவது:-

மேலோடு நாம் நீரேற்றப்பட்ட தாதுக்கள் என்று அழைக்கிறோம், எனவே அவற்றின் படிக அமைப்பில் உண்மையில் தண்ணீரைக் கொண்டிருக்கும் தாதுக்கள் ஆகும்.

செவ்வாய் கிரகங்கள் மற்றும் கிரகத்திலிருந்த விண்கற்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை பயன்படுத்தி, இந்த ஆய்வு குழு நீரின் முக்கிய அங்கமான ஹைட்ரஜனில் கவனம் செலுத்தியது.

பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. பெரும்பாலானவை அவற்றின் கருவில் ஒரே ஒரு புரோட்டானைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஒரு சிறிய பகுதியே, சுமார் 0.02 சதவிகிதம், ஒரு புரோட்டான் மற்றும் நியூட்ரான் இரண்டையும் கொண்டிருக்கின்றன, இதனால் அவை கனமானவை. இவை டியூட்டீரியம் அல்லது "கனமான" ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகின்றன.

இலகுவான வகை கிரகத்தின் வளிமண்டலத்தை வேகமான வேகத்தில் தப்பிப்பதால், பெரும்பாலான நீரை விண்வெளிக்கு இழப்பது ஒப்பீட்டளவில் அதிக டியூட்டீரியத்தை விட்டுச்செல்லும். தற்போதைய டியூட்டீரியம்-க்கு-ஹைட்ரஜன் விகிதத்தை வளிமண்டல இழப்பால் மட்டும் விளக்க முடியாது என கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!