நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'சைதாபேட்டை வடகறி'... இன்றும் குறையாத மவுசு! -

 சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்ட செய்யும் 'வடகறி' தான் நினைவுகளைத் தானாக தட்டி எழுப்பிவிடும்.


சைதாப்பேட்டை வட்டாரத்தில் மட்டுமே சுவைத்து கொண்டிருந்த இந்த வடகறியை, அதன் அதிகாரபூர்வமற்ற பிராண்டு அம்பாசிட்டராக இருந்து தமிழகம் முழுவதும் அறியச் செய்ததன் பெருமை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனையே சாரும். ஒரு திரைப்படத்தில் அவர் உதிர்த்த 'சப்பாலங்கிரி கிரி கிரி' என்ற வசனம் சைதாப்பேட்டை வடகறியின் பிராண்டு ஸ்லோகன் ஆனது.

வடகறி என்றால் சைதாப்பேட்டை எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதேபோல சைதாப்பேட்டை மக்களுக்கு வடகறி என்றால் நினைவுக்கு வருவது சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'மாரி ஓட்டல்'. சைதாப்பேட்டைக்கு வடகறியை அறிமுகப்படுத்திய பெருமை, இந்த மாரீ ஓட்டலையே சாரும்.

பருப்பு வடையின் அடுத்த அப்டேட் வெர்ஷன்தான் இந்த வடகறி. கடையில் பருப்பு வடைக்காக தயாரிக்கப்பட்ட கடலைமாவு மீதமான நிலையில், அதனை வெங்காயம், தக்காளி, மசாலா கலவையோடு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுதான் வடகறி.


இந்த வடகறி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எல்லா காலை உணவுகளுக்கும் பிரதான 'சைட் டிஷ்' ஆக உள்ளது. மாரீஸ் ஓட்டலில் வடகறியை வாங்குவதற்கென்ற ஏராளமான மக்கள் தனியாக வீட்டில் இருந்து பாத்திரம் எடுத்து வருகின்றனர். வீட்டில் சுடச்சுட இட்லியும், தோசையும் மட்டும் தயார் செய்து விட்டு, அதே வேகத்தில் மாரீஸ் ஓட்டலுக்கு ஒரு விசிட் அடித்து, கொண்டு வந்த பாத்திரத்தில் வடகறியை வாங்கி செல்கிறனர் சலிப்பு தட்டாத சைதைவாசிகள்.

"தனிச்சுவை மட்டுமின்றி, தரத்தில் துளி புகாரும் வராத அளவுக்கு தயார் செய்வதில் எப்போதும் கவனம் செலுத்துவதுதான் எங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குக் காரணம்" என்கின்றனர் இந்த உணவகத்தினர்.

வடகறிக்காக தனி அடுப்பு எறிந்து கொண்டிருந்தாலும், காலை 7.30 மணியில் தொடங்கி 9.30 மணிக்குள் மட்டுமே வடகறியை வாங்க முடியும்.



also read :  சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!