நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி

குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் சாமை, வெஜிடபிள் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி


தேவையான பொருட்கள்


சாமை அரிசி - 500 கிராம்,  

வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், 

சௌசௌ - தலா 100 கிராம்

பச்சைப்பட்டாணி - 50 கிராம்,

தயிர் - அரை கோப்பை, 

இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு,

சோம்பு, பட்டைப்பொடி - 2 

மேசைக்கரண்டி,

மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

நெய் -100 மி.கி,

ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,

பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.


செய்முறை

வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின் புதினாவை சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!