நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“ஆணுக்கு பெண் சரிசமம்” - நேபாளத்தில் கணவரை முதுகில் சுமந்து ஓட்டப்பந்தயம் ஓடிய பெண்கள்!

 “ஆணுக்கு பெண் சரிசமம்” என்ற பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாளத்தில் தங்களது கணவன்மார்களை முதுகில் ‘உப்பு மூட்டை’ தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயம் ஓடி அசத்தியுள்ளனர் பெண்கள். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது. 


உள்ளூர் சார்பில் நேபாளத்தில் தேவ்காட் கிராமத்தில் 100 மீட்டர் ஓட்டமாக நடைபெற்றது. வெவ்வேறு வயது பிரிவில் சுமார் 16 தம்பதியர் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


“மனதளவிலும், உடல் அளவிலும் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தவே இதை நடத்தியுள்ளோம்” என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திர போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.



also read :  செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!