நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா கூறுகிறது.
அமெரிக்க விண்வெளி ஏஜென்சி நாசா நீண்ட காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறதுு.

சமீபத்தில், NASA Perseverance ரோவர் (NASA Mars Perseverance Rover) மூலம் செவ்வாய் கிரகத்தில் (Mars) உயிர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறது. மறுபுறம், சில விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிர்கள் இருக்கிறதா என்பதை (NASA Mars Mission) பூமியில் இருக்கும் ஒரு சால்டா ஏரியின் உதவியுடன் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். 

தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா (NASA) கூறுகிறது.

துருக்கியின் சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் கற்கள் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்திற்கு (Jezero Crater) அருகில் காணப்படும் பாறைகளுக்கு மிகவும் ஒத்தவை என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள Jezero Crater என்பது நாசாவின் Perseverance Rover என்னும் ரோவர் தரையிறக்கிய இடமாகும். முன்பு ஜசீரோ பள்ளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மட்டுமல்ல, இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் மிகவும் ஆபத்தான பகுதி எனவும் கூறப்படுகிறது.
நுண்ணுயிரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஏரியைச் சுற்றியுள்ள பெரிய குன்றுகள் காணாமல் போயுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததா என்பதையும் அங்குள்ள வளிமண்டலத்தையும் புரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

அமெரிக்காவிலும் (America) துருக்கியிலும் உள்ள விஞ்ஞானிகள் சால்டா ஏரியின் சில பகுதிகள் குறித்து 2019 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி செய்தனர். சால்டா ஏரியில் உள்ள நீல நீர் மற்றும் வெள்ளை கரைகள் காரணமாக துருக்கியின் மாலத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து விஞ்ஞானிகள் முக்கிய தகவல்களை பெறலாம்.



 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!