நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விடாமல் துரத்திய திமிங்கலம்.. பயணிகள் படகில் தாவி எஸ்கேப் ஆன பென்குயின் - வீடியோ!

 அண்டார்டிகாவில் சுற்றுலா பயணிகளின் படகில் ஏறி திமிங்கலடைத்திடமிருந்து உயிர் பிழைத்துள்ளது பெங்குயின் ஒன்று. அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. நீரில் வாழும் பறக்காத பறவை இது. 

“இந்த காட்சியை நேரில் பார்க்க ரொம்பவே பிரம்மிப்பாக இருந்தது. டிவியில் டிஸ்கவரி சேனல் பார்ப்பதை போல இருந்தது. அந்த கொலைகார திமிங்கலத்திடமிருந்து பெங்குயின் தப்பி பிழைத்தது சந்தோஷத்தை கொடுத்தது. இல்லையென்றால் அது அந்த திமிங்கலத்திற்கு இரையாகி இருக்கும்” என அந்த காட்சிகளை கேமராவில் பதிவு செய்த பயண ஆர்வலர் மேட் கார்ஸ்டென். 

அந்த வீடியோவில் பெங்குயின் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்து கடைசியாக படகில் ஏறியதும் சுற்றுலா பயணிகள் கூக்குரல் இட்டனர். சிறிது நேரம் அந்த படகில் தஞ்சமடைந்த பெங்குயின் பிறகு நீரில் குதித்து பறந்தது.



also read :  தொற்றுநோய்க்கு மத்தியில் தனிமையில் இருந்து விடுபட அரவணைக்கும் இலவச ஆட்டுப்பண்ணையை திறந்த ஜெர்மன் குடும்பம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!