நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புதிய வகை கொரோனா; ஆக்ஸ்போர்டு, பைசர் தடுப்பூசி 80 % செயல் திறன் கொண்டது-ஆய்வில் தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி1.617.2 -உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் செயல் திறன் மிக்கவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன்,

இந்தியாவில் காணப்படும் புதிய வகை பி1.617.2 கொரோனாவுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு/ அஸ்ட்ரா செனகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் 80-சதவீதத்திற்கும் மேல் செயல் திறன் கொண்டதாக உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 


அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கோவிஷீல்டு என்ற பெயரில் சந்தையில் உள்ள இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்ட பிறகு செயல் திறன் 80-சதவீதத்திற்கும் மேல் உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

இங்கிலாந்திலும் பி1.617.2 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு இருப்பதால், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!