நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மர்மமான வுஹான் ஆய்வகம்: சீனா மறைத்த மற்றொரு தகவல் வெளிவந்தது

 சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


பீஜிங்: 

 சீனாவின் வுஹான் ஆய்வகம் பற்றியும், சீனா மூடி மறைத்த சில விஷயங்கள் பற்றியும் ஒரு சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சீன ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் உலகில் பரவியுள்ளது என்ற ஊகம் இதன் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கோவிட்-19 எவ்வாறு தோன்றியது என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் குழுவின் சந்திப்புக்கு முன்னதாக இந்த வெளிப்பாடுகள் வந்துள்ளன. 


முன்னர் வெளியிடப்படாத அமெரிக்க (America) உளவுத்துறை தரவைப் பற்றி குறிப்பிட்ட வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கை, பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த கால அளவு, அவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்றுவந்த தகவல்கள் ஆகியவை குறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை ஃபாக்ட் ஷீட்டில், 2019 இலையுதிர்காலத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், கோவிட் -19 மற்றும் பொதுவான பருவகால நோய் ஆகிய இரண்டிற்கும் ஒத்த அறிகுறிகள் அவர்களுக்கு காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


WIV இன் ஆராய்ச்சியாளர்கள் 2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டனர்

கோவிட் போன்ற அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி வுஹானில் டிசம்பர் 8, 2019 அன்று பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) அறிக்கை மூலம் அறிவித்தது. 

"WIV க்குள் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டார்கள் என்று சந்தேகிக்க அமெரிக்க அரசாங்கத்திடம் பல காரணங்கள் உள்ளன. முதல் கோவிட்-19 நோயாளி பற்றி சீனா அறிவித்தற்கு முன்னரே சீன ஆராய்ச்சியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தென்பட்ட அறிகுறிகள் கோவிட் -19 (COVID-19) மற்றும் பொதுவான பருவகால நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருந்தன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வக ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய உளவுத்துறை விவரங்களைப் பற்றி நன்கு அறிந்த தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மதிப்பீட்டிற்கான துணை ஆதாரங்களின் வலிமை குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியதாக 'டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சர்வதேச கூட்டாளரால் இந்த தகவல் அளிக்கப்பட்டதாகவும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், எனினும், இதில் இன்னும் அதிக விசாரணையும் தெளிவும் தேவைப்படுகிறது என்றும் ஆய்வக வட்டாரம் தெரிவித்தது.

"பல்வேறு ஆதாரங்களில் இருந்து எங்களுக்கு வந்த தகவல்கள் நேர்த்தியான தரம் வாய்ந்தவை. இவை மிகவும் துல்லியமான தகவல்கள். சீன ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஏன் நோய்வாய்ப்பட்டார்கள் என்பதுதான் இவற்றில் கூறப்படவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையான முறையில் உருவானது என தோன்றவில்லை: டாக்டர் ஃபவுசி 

ஒரு நிகழ்வின் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர் ஆலோசகரான டாக்டர் ஃபவுசி, “இது இயற்கையில் உருவான வைரஸ் என நான் நம்பவில்லை. சீனாவில் (China) என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், விசாரணை தொடர வேண்டும் என என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.

"இதை விசாரித்தவர்கள் கூறுகையில், அது ஒரு விலங்கு நீர்த்தேக்கத்திலிருந்து தோன்றியிருக்கலாம், பின்னர் அது தனிநபர்களை பாதித்திருக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். எனவே, வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் எந்தவொரு விசாரணைக்கும் நான் முழுமையான அதரவை அளிப்பேன்" என்று அவர் மேலும் கூறினார்.



ALSO READ : புதிய வகை கொரோனா; ஆக்ஸ்போர்டு, பைசர் தடுப்பூசி 80 % செயல் திறன் கொண்டது-ஆய்வில் தகவல்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!