நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை எழுந்ததுமே முதல் ஆகாரம் டீ தானா..? அதையும் ஆரோக்கியமாக்க இனி இப்படி டீ போடுங்க..!

தேநீர் புத்துணர்ச்சி பானம் மட்டுமின்றி அதில் எண்ணற்ற மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது.
நமது நாட்டில் தேநீர் அருந்தும் பழக்கம் அதிகம் உள்ளது. தேநீர் புத்துணர்ச்சி பானம் மட்டுமின்றி அதில் எண்ணற்ற மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. நீங்கள் தினமும் அருந்த வேண்டிய ஆரோக்கியமான தேநீர் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

இஞ்சி தேநீர் : 
இஞ்சி ஒரு நன்மை பயக்கும் மூலிகையாக கருதப்படுகிறது. உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், புத்துயிர் பெறவும் புதிதாய் தயாரிக்கப்பட்ட சூடான இஞ்சி தேநீர் அருந்துவது மிகவும் நல்லது. ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இஞ்சி தேநீர் புத்துணர்ச்சியூட்டும் சுவையை வழங்கும், இது தொண்டை புண்ணை குணப்படுத்தும் சக்தி பெற்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்றது. எனவே தினமும் நீங்கள் அருந்தும் தேநீரில் சில துண்டுகள் இஞ்சிசேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை தேநீர் :
நீங்கள் ஒரு சரியான பானத்தைத் தேடுகிறீர்களானால், உங்கள் தேநீரில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, சிட்ரஸ் நன்மையுடன் கூடிய தேநீரை அருந்துங்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆறு வாரங்களுக்கு எலுமிச்சை தேநீர் அருந்தியவர்கள் ஆரோக்கியமாக<br />இருப்பதாக நிரூபித்துள்ளனர் . எனவே இதய நோய், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு எலுமிச்சை தேநீர் நன்மை பயக்கும்.

செம்பருத்தி தேநீர் : 
செம்பருத்தி தேநீர் உங்கள் வழக்கமான பானத்தில் ஒரு வண்ணத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆன்டிவைரல் பண்புகளையும் கொண்டுள்ளது. செம்பருத்தி ரோசெல்லே எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிபராசிடிக் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்து செம்பருத்தி தேநீர் அருந்தி வந்தால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதில் நன்மை பயக்கும். மேலும் செம்பருத்தி தேநீர் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. செம்பருத்தி பூக்களை காய வைத்து அரைத்து அந்த பவுடரை கொண்டும் தேநீர் தயாரிக்கலாம். இதனை சூடான தேநீராக மட்டுமின்றி, தண்ணீரில் கொதிக்கவைத்து குளிர்ந்த பானமாகவும் அருந்தலாம்.

மிளகுக்கீரை தேநீர் : 
உங்கள் தேநீரில் மிளகுக்கீரை சேர்ப்பது நிச்சயமாக உங்கள் தேநீர் சுவையை அதிகரிக்கும். மிளகுக்கீரை தேநீரை அருந்துவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகான்சர், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக தலைவலி, சைனஸ் பிரச்சினைகள் அல்லது வயிற்று பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்ளவர்களுக்கு மிளகுக்கீரை தேநீர் நல்ல பலன் தரும்.

கெமோமில் தேநீர் : கெமோமிலலை(chamomile) பாபூன் கா ஃபால் என்று இந்தியில் அழைப்பார்கள். இதற்கு நோய் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தரும். நீங்கள் இந்த தேநீரை படுக்கப் போகும் முன் அருந்தினால் அது உங்கள் நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப் படுத்தி உங்களை விரைவாக தூக்கம் வரும். உங்களுக்கு சளி, சுரம், வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, போன்ற உபாதைகள் இருந்தால் இந்த தேநீர் அதில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!