நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மத்திய அரசுக்கு ரூ.99 ஆயிரம் கோடி உபரி தொகையை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

மத்திய அரசுக்கு ரூ.99 ஆயிரத்து 122 கோடி உபரி தொகையை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.
மும்பை,

வங்கிக்கடனுக்கான வட்டி உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கி ஈட்டும் வருவாயில் அனைத்து விதமான செலவினம் போக மீதி இருப்பை ரிசர்வ் வங்கி உபரி தொகையாக வைத்திருக்கிறது.

இந்த உபரித்தொகை ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அப்போது ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்தது.


இதன் தொடர்ச்சியாக தற்போதும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்த ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் மத்தியக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்தவகையில் மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத கணக்கியல் காலத்திற்கு, மத்திய அரசுக்கு உபரித்தொகை ரூ.99,122 கோடியை வழங்க இந்த குழு ஒப்புதல் அளித்தது.

மேலும் கொரோனா 2-வது அலையால் எழுந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்கள், தற்போதைய பொருளாதார நிலவரம், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் கணக்கியல் ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் என்றவாறு மாற்றியிருக்கும் நிலையில், நிலைமாற்ற காலமான ஜூலை-2020 முதல் மார்ச்-2021 வரையிலான 9 மாத கால ரிசர்வ் வங்கியின் பணிகளையும் இந்தகுழு ஆய்வு செய்தது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் தேபப்ரதா பத்ரா, ராஜேஸ்வர் ராவ், ரபி சங்கர் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!