Posts

Showing posts from May, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாட்ஸ்-அப்பில் கேஸ்பேக்..!சலுகையைப் பெற என்னசெய்ய வேண்டும்?

Image
 வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களை வாட்ஸ்அப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில், தனது அப்ளிகேஷன் மூலம் பணம் அனுப்பும் பயனருக்கு ரூ.35 கேஷ்பேக் வழங்குகிறது. கூகுள்பே, போன்பே, பேட்டியம் போன்ற பல்வேறு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள் பெருவாரியான மக்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமுக செய்தி இணையதளமான வாட்ஸ்-அப்பும் தனது அப்ளிகேஷனில் பேமெண்ட்டு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பல கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேமெண்ட்டு வசதியானது பொதுமக்களிடம் பெரிதும் கவனம் பெறாத நிலையில், அதனை பயனர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில், தனது அப்ளிகேஷனில் உள்ள பேமெண்ட் வசதிகளை பயன்படுத்தி அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற பணம் மூன்று வெவ்வேறு தொடர்புகளுக்கு பணம் அனுப்புவதன் மூலம் 35 கேஷ்பேக் ரிவார்டுகளை மூன்று முறை மட்டும் பெறலாம் என தெரிவித்துள்ளது. இதனை தனது கேள்விகள் பக்கத்தில் தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு கேஷ்பேக் பயன் தொடர்பான பரிசு ஐகானை வழங்குகிறோம் என தெரிவித்

உங்க உதடு ரொம்ப கருப்பாக உள்ளதா? கவலையை விடுங்க.. இதோ சில அசத்தலான டிப்ஸ்!

Image
 பொதுவாக நம்மில் பலருக்கு முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்களுடைய உதடு பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவோ அல்லது வெளிர் நிறமாகவும், வெலுத்துப் போயிருக்கும். நம்முடைய முகத்தின் அழகு நிறைவாக வேண்டும் என்றால், உதடுகள் சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். உதடுகளை இயற்கையான முறையில் சிவப்பு நிறத்திற்கு மாற்ற ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.  பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும். தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.  மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.  எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் க

கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Image
 கீரையில் பல வகைகள் உள்ளன. அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது. கீரை வகைகளையும், அதில் அடங்கியுள்ள சத்துக்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம். முருங்கை கீரை: முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. முருங்கை கீரை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால் அசதி நீங்கும். அகத்தி கீரை: அகத்தி கீரையை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்தி கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சிலருக்கு அலர்சி உண்டாகலாம். தண்டுக்கீரை: மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் குணமாகும். இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் நீர்க்கடு

உடல் எடையை வேகமாக குறைக்கனுமா? இந்த நான்கு பயிற்சிகளை ஒன்றை செய்து பாருங்க!

Image
 பொதுவாக உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம். எனவே இவற்றை முடிந்தவரை குறைப்பது நல்லது. தற்போது உடல் எடையை குறைக்கும் ஒரு சில எளிய உடற்பயிற்சிகளை இங்கே பார்ப்போம்.  ஜம்பிங் ஜாக்ஸ் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளுள் இதுவும் இன்று. இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். பின்பு கால்களை தரையில் அழுத்தியபடி துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்திக்கொள்ள வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க வேண்டும்.  சில நிமிடங்களுக்கு பிறகு குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். துள்ளிக்குதிக்கும்போது கால் தரைக்கு

தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?

Image
  ஒருவர் ஒருநாளில் எத்தனை மணிநேரம் தூங்குகிறார் எவ்வளவு நன்றாக தூங்குகிறார் என்பதையே ’தூக்க சுகாதாரம்’ (Sleep hygiene) என்று வரையறுக்கின்றனர்.   ஒருவருக்கு உடல் சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்க சுகாதாரமும் மிகமிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். செய்யவேண்டியவை: தினசரி வேலைகளை அட்டவணையிடுங்கள். இது தூக்க நேரத்தை கணக்கிடவும், தினசரி அதை வழக்கமாக்கவும் உதவும். கெமோமில் தேநீர், லாவெண்டர் தேநீர் போன்ற ஹெர்பல் தேநீர்களை அருந்துங்கள். இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். உடல் சௌகர்யம் தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே படுக்கைக்கு செல்லும்போது தளர்ந்த சௌகர்யமான ஆடைகளை அணியுங்கள். படுக்கைகளை சரிசெய்யுங்கள். தூங்கும் இடத்தை தொந்தரவுகளின்றி வையுங்கள். செய்யக்கூடாதவை: பகல் மற்றும் மாலைநேரத்தில் தூங்குவதை தவிர்த்திடுங்கள். இது இரவு தூக்கத்தை பாதிக்கும். தூங்கப்போவதற்கு 4-5 மணிநேரத்திற்கு முன்பு கஃபைன் பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்துமுடித்த

எதிரே இருப்பது என்னவென்று தெரிவித்து பார்வை மாற்றுத்திறனாளிக்கு உதவும் 'பி மை ஐஸ்' செயலி.....

Image
  பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பி மை ஐஸ் ( BE MY EYES) என்ற செயலி பெரிதும் உதவி வருகிறது. பார்வை சவால் உள்ளவர்கள் தங்களது செல்போனில் பி மை ஐஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ வசதியை திறக்க வேண்டும். இதன் பின்னர் அவர்கள் தங்களது கைகளிலோ அல்லது சட்டை பாக்கெட்டிலோ செல்போனை வைத்துவிட்டால் அந்த செயலி மூலம் எதிரே இருப்பது என்ன என்பது குறித்து அந்த ஆப் தகவல்களை அளிக்கும். இதன் மூலம் அந்த நபர் நேராக செல்லலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து செல்லும் இடத்திற்கு சரியாக சென்றுவிடலாம். பால் அட்டைப்பெட்டியில் காலாவதி தேதியைப் படிப்பதில் இருந்து சட்டையின் நிறத்தை விவரிப்பது வரை இந்த் ஆப் பல உதவிகளை செய்யும்.  2015 இல் Hans Jorgen Wiberg ஆல் உருவாக்கப்பட்ட Be My Eyes செயலி, சிறிய, அன்றாடப் பணிகளில் உதவி தேவைப்படும் பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ALSO READ :  உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்........

5,500 ஆண்டுகள்... உலகின் மிகப் பழமையான மரம் சிலியில் கண்டுபிடிப்பு.......

Image
  தெற்கு சிலியில் உள்ள காடு ஒன்றில் 5,484 ஆண்டுகள் பழமையான ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய ஆய்வின்படி உலகின் மிகப் பழமையான மரம் இது என்று நம்பப்படுகிறது. "பெரிய தாத்தா" என்று அழைக்கப்படும் இந்த பழங்கால அலர்ஸ் மரம் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த மரம் கலிபோர்னியாவில் உள்ள 4,853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் சாதனையை முறியடிக்கும். இந்த மரத்தின் மிகப்பெரிய சுற்றளவின் காரணமாக, மர வளையங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகளால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை. பொதுவாக, மர வளையங்களின் எண்ணிக்கையை எண்ணுவதற்கு 1 மீட்டர் (1.09 கெஜம்) மர உருளை பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால் பெரிய தாத்தா எனும் இந்த மரத்தின் தண்டு 4 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஜோனதன் பரிச்சிவிச், அவர்கள் பிரித்தெடுத்த மாதிரி மற்றும் பிற டேட்டிங் முறைகள் மூலம் இந்த மரம் 5,484 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றன. மேலும், "அனைத்து வளையங்களையும் நாம் ஏற்கெனவே சோதனை செய்த மரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,

பிளாஸ்டிக்கை மட்க செய்ய நூறாண்டுகள் எதற்கு? இனி 16 மணி நேரம் போதுமே! விஞ்ஞானிகள் சாதனை!

Image
  பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மட்கச் செய்யும் வேதிப்பொருளை (நொதி) ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்து மட்க 450 ஆண்டுகள் ஆவதால் அது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வாக, பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மட்கச் செய்யும் பாலியஸ்டர் ஹைட்ரலேஸ் (PHL7) என்ற நொதியை ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கல்லறையில் மட்கிய பொருள் ஒன்றிலிருந்து இந்த நொதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நொதியை தங்கள் ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்ற விஞ்ஞானிகள் நிகழ்த்திய சோதனையில் அந்த நொதி 16 மணி நேரத்திற்குள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட்டை (PET) 90% சிதைக்க முடிந்தது என்பதைக் கண்டறிந்தனர். பிளாஸ்டிக்கை மட்கச் செய்ய ஜப்பானில் 6 ஆண்டுகளுக்கு முன்பே LLC என்ற ஒரு நொதி கண்டறியப்பட்டதாகவும் ஆனால் தாங்கள் கண்டறிந்துள்ளது அதை விட 2 மடங்கு வேகமானது என்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக்குகளை சிதைக்க PHL7க்கு எந்த வினையூக்கிகளும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் பயன்பாட்

தரையில் தூங்குவதால் வரும் நன்மைகள் தெரியுமா?...

Image
  வெறும் தரையில் படுத்து தூங்குவதால் உடலுக்கு அதிகளவிலான நன்மைகள் கிடைக்கின்றன. தரையில் தூங்குவதால் வரும் நன்மைகள் மெத்தையில் தூங்குவது பிரச்னைகளை உருவாக்கும் தூக்கம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. அதனை எப்படி தூங்குகிறோம் என்பதுதான் முக்கியம். பலர் மெத்தையில் படுப்பதையே சுகம் என்றும் அதில்தான் நன்மை என்றும் நினைத்துக்கொண்டு தரையில் படுப்பதை தவிர்த்துவருகின்றனர். ஆனால் தரையில் படுப்பதால் உடல்நலத்திற்கு அதிகளவிலான நன்மைகள் கிடைக்கின்றன. மெத்தையில் தூங்குவதால் வரும் பிரச்னைகள்: மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க வாய்ப்பில்லை. மெத்தையின் மென்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சௌகரியமாக தூங்கலாம். ஆனால் அது முதுகெலும்பு தோரணையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவாது. தரையில் தூங்குவதால் வரும் நன்மைகள்: முதுகெலும்பு நேராக வைத்திருப்பதற்கு உதவும்.ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது.  தரையில் படுக்கும்போது கிட

சாப்பிடும்போது டிவி பார்க்குறிங்களா?... இதை கவனிங்க...

Image
  சாப்பிடும்போது டிவி பார்ப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் உருவாகின்றன. சாப்பிடும்போது டிவி பார்க்கக்கூடாது டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் பல பிரச்னைகள் மனிதனுக்கு உரிய அத்தியாவசியங்களிலேயே உணவு மிகவும் முக்கியமாகும். ஆனால் பலர் உணவு உண்ணும்போது அதற்குரிய மதிப்பை கொடுப்பதில்லை. உணவில் கவனம் செலுத்தி சாப்பிடாமல் டிவியையோ, மொபைலையோ பார்த்துக்கொண்டு சாப்பிடுகின்றனர். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன. அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருப்பதால் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இருந்தால் சாப்பிடும் அளவு தெரியாது. இதனால் வழக்கத்தைவிட அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.  முக்கியமாக நாம் அதிகம் சாப்பிடும்போது அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சிக்னல் கொடுக்கும். ஆனால் நமது கவனம் முழுவதும் திரையில் இருந்தால் அந்த சிக்னலை நாம் உணர மறக்கலாம்.  அதேபோல் திரையில் கவனம் செலுத்தி சாப்பிடும்போது ஒழுங்காக மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் செரிமான பிரச்னை, வயிற்று உப்புச பிரச்னைக்கு வழிவகுக்கும். மேலும்,

இவருதாங்க உண்மையான ஸ்னேக் பாபு: பாம்பெல்லாம் இவருக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி, திகில் வைரல் வீடியோ

Image
  Scary Snake Video: டஜன் கணக்கான விஷப் பாம்புகளுக்கு மத்தியில் தூங்கும் நபரை நீங்கள் பார்த்ததுண்டா? விஷப்பாம்பு கடித்தால் என்ன ஆவது என்ற கவலை இவருக்கு இல்லை.  பாம்புகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் நபர். பாம்பு அவரை கடித்ததா கடிகவில்லையா? இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ. வைரல் வீடியோ:   இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.  சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  பாம்பை பார்த்தால் பலசாலிகளும் நடுங்குவார்கள். பாம்பிடமிருந்து விலகி இருக்கவே அனைவரும் ஆசைப்படுவதுண்டு. ஏனென்றால், பாம்பு எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆகையால் பாம்

பலரின் வலி சிலருக்கு லாபம்: 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா.......

Image
  பணக்காரரின் செல்வத்தை அதிகரிக்கும் கொரோனா; ஏழைகளை வறியவராக மாற்றும் கோவிட் பணக்காரரின் செல்வத்தை அதிகரிக்கும் கொரோனா ஏழைகளை வறியவராக மாற்றும் கோவிட் கொரோனா தொற்றுநோய் பாதித்த சமயத்தில் ​​573 பேர் மில்லியனர்கள் ஆனார்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கத் தொடங்கிய கோவிட், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு உலகப் பொருளாதார மன்றத்திம் கூடியது. அதில், ​​ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம் இது என்று ஆக்ஸ்பாம் கோருகிறது. சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, "வலியிலிருந்து லாபம்" என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீஸ்வரரை உருவாக்குகிறது என்ற செய்தி சந்தர்ப்பங்களின் பலன் சிலருக்கு கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது. கொரோனாவால் (Coronavirus) திடீரென செல்வந்தர்களின் செல்வம் அதிகரித்ததைப் போலவே, ஏற்கனவே வறுமையில் இருந்தவர்களின் ஏழ்மை நிலையும் மேலும் மோசமாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்குக் தள்ளப

உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்........

Image
  உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... ஆம்... சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  புல்வெளிகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பை ஆய்வு செய்த விஞ்ஞானிகள். கடல் புல்கள் கார்பனை உறிஞ்சுவதில் மிகவும் திறமையானவை. காலநிலை மாற்றத்தின் பார்வையில் கடல் புல்லின் விரைவான அழிவு நிகழ்வு ஆபத்தான அறிகுறியாகும். உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... ஆம்... சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 32 பில்லியன் கோக் கேன்களுக்கு சமமான சர்க்கரை கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நுண்ணுயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் (Max Planck Institute for Marine Microbiology) என்னும் கல்வி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்குள் சர்க்கரை மலையைக் கண்டுபிடித்துள்ளனர்.  உலகப் பெருங்கடல்களில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரையின் பெரிய மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல் புல் மிக வேகமாக அழிந்து வருவதாக விஞ்ஞானிகள

Bilateral Microstomia: அரிய நோயால் நிரந்திர புன்னகையுடன் பிறந்த குழந்தை

Image
  உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...   Bilateral Microstomia என்னும் அரிய நோய். உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. எனது கர்ப்ப காலம் முழுவதும் நான் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன் என்கிறார் தாய். உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...  வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சமீபகாலமாக அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் காணப்படும் அந்த குழந்தை,   பிறவிக் கோளாறு காரணமாக, முகத்தில் புன்னகை நிரந்திரமாகி விட்டது. இந்த பெண் குழந்தை டிசம்பர் 2021ல் பிறந்தது. அதன் பெயர் அய்லா

மர்மமான பெர்முடா பயணம் மேற்கொள்ள தயாரா; கப்பம் நிறுவனத்தின் பகீர் ஆஃபர்........

Image
  Bermuda Triangle: . சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது. கப்பல்களையும் விமானங்களையும் விழிங்கும் பெர்முடா முக்கோணம். சுற்றுலாவாசிகளை கவருவதற்காக சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய யுக்தியை கையாண்டுள்ளது. கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன. உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது. இதை சிலர் பாதாள உலகிற்கான கதவு என்கிறார்கள், இதை சிலர் இயல்பிற்கு மாறான மர்மமான பகுதி என்கிறார்கள். இது தொடர்பாக பல பாலிவு

மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது எப்படி?

Image
இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்... மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்... நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். நிம்மதியான தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது.

சுத்தம் செய்வது முதல் பூச்சி வராமல் தடுப்பது வரை.. வெங்காய ஹேக்ஸ் இங்கே!

Image
 முகப்பருவை அகற்றுவது முதல் சுத்தம் செய்வது வரை, நீங்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தக்கூடிய சில ஆச்சரியமான வழிகள் இங்கே உள்ளன. வெங்காயம் எந்த ஒரு உணவின் சுவை, நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை உடனடியாக அதிகரிக்கும். அது இல்லாத ஒரு இந்திய உணவை கற்பனை செய்து பார்க்க முடியாது! வெங்காயம் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் வெங்காயம் வீடு, சமையலறை மற்றும் தோட்டத்தில் சில சுவாரஸ்யமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. முகப்பருவை அகற்றுவது முதல் சுத்தம் செய்வது வரை, நீங்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தக்கூடிய சில ஆச்சரியமான வழிகள் இங்கே உள்ளன. முகப்பரு நீங்க, வலியை குறைக்க ! முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் வெங்காயத்தில் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் உள்ளன. நசுக்கிய வெங்காயத் துண்டுகளை தண்ணீரில் கலந்து முகப்பருவில் தடவவும். இதில் ஆண்டிசெப்டிக் பண்புகள் இருப்பதால் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. வெங்காயம் அதன் அழற்சி எத

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!