நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ

 அவரின் வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாய் போன்று தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ள விரும்பியுள்ளார்.


மனிதர்களாகிய நாம் எதோ ஒரு இலக்குடனும் லட்சியத்துடனும், வாழ்க்கையில் பயணிப்போம். அதாவது சிலருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும், பில்கேட்ஸ்சாக வேண்டும், குறிப்பாக 90 கிட்ஸ்களுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றெல்லாம் பல கனவுகள் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர், மனிதராக வாழ்ந்து போர் அடித்து விட்டதாக நாயாக மாற விரும்பியுள்ளார்.

ஜப்பான் நாட்டில் உள்ள டோகோ என்ற டிவிட்டர் பயனாளர் ஒருவர் தனது விசித்திர ஆசையை நிறைவேறியுள்ளார். அதாவது அவரின் வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாய் போன்று தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ள விரும்பியுள்ளார்.

இதற்கு ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் ரூ.12 லட்சத்தில் அதற்கான உடையை வாங்க ஏற்பாடு செய்துள்ளார். கோலி இன நாயின் உருவத்தில் இருக்கும் அந்த உடையில் அவர் முழு உருவில் நாய் போன்று காட்சி தந்தார்.

நான்கு கால்களையும் முன்னும் பின்னும் ஆட்டி, சாய்வாக படுத்து, வாயை அசைத்து கிட்டத்தட்ட நாயை போன்று செயல்பட்டார்.

இந்த உடையை வடிவமைக்க 40 நாட்கள் ஆகிவிட்டதாம். இந்த வீடியோ பதிவு டிவிட்டரில் வெளியாகி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.



ALSO READ : மலானா: மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம் -

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!