நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எடையை வேகமாகக் குறைக்கும் பிரிஞ்சி இலை நீர்! இப்படி எடுத்து கொண்டாலே போதுமாம்......

 பிரிஞ்சி இலை, தேஜ் பட்டை, பிரியாணி இலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.


இது புலாவ், பிரியாணி, சூப் போன்றவற்றில் உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படுகின்றது. இதில் விட்டமின் A, C, B6 மற்றும் இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட முக்கிய சத்துப்பொருட்கள் கலந்திருக்கிறது.

இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவின் சுவை கூடுவது மட்டுமல்ல , சில ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுவது உண்டு.

இந்த இலையை உணவில் மட்டுமல்லாது, இதனை கொதிக்க வைத்து அருந்துவதனாலும் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.  


எப்படி தயாரிப்பது? 

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.

இதில் ஒரு கைப்பிடி அளவுக்கு (10 -15) இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 2 நிமிடங்கள் நன்கு கலக்கி விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறிது தேன் சேர்த்து டீ போலவும் குடிக்கலாம். அவ்வப்போது லேசாக சூடேற்றி வெதுவெதுப்பாகவும் குடிக்கலாம்.

ஆற வைத்து விட்டு தண்ணீர் தாகம் எடுக்கும்போது இந்த நீரை குடித்து வரலாம். இது வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யும்  

நன்மைகள்

  • வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

  •  உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது. 

  • மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் வேலையை செய்கிறது.

  •  உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

  • மூச்சுக்குழாய் தொடர்புடைய பிரச்சினைகளில் இருந்து தீர்வு தருவதோடு சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது.

  •  இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!