நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மண மணக்கும் ‘மசாலா காபி’

 காபியில் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. ஒரு நாளில் மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ம்மில் பலர், காலைபொழுது விடிந்ததும் அந்த நாளை காபியுடன்தான் தொடங்குவோம். காபி உற்சாக பானமாகவும், ஆற்றலைத் தருவதாகவும் இருக்கும். உலகம் முழுவதும் காபி பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய காபி, 17-ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் நுழைந்தது. சர்வதேச காபி அமைப்பு மற்றும் உலக நாடுகளில் உள்ள காபி சங்கங்கள் இணைந்து அக்டோபர் 1-ந் தேதியை சர்வதேச காபி தினமாகக் கொண்டாடி வருகின்றன.

காபியில் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. ஒரு நாளில் மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐரிஷ் காபி, எக்ஸ்ப்ரசோ, காப்பசீனோ, மோக்கசினோ, டர்கிஷ் காபி, பில்டர் காபி, டிகிரி காபி, டிக்காஷன் காபி என பல விதங்களில் காபி தயாரிக்கிறார்கள். அந்த வரிசையில் இங்கு நாம் பார்க்கப்போவது ‘மசாலா காபி’.

உடலுக்கு நன்மை செய்யும் மசாலா காபி செய்முறை இதோ:

அரைப்பதற்கு தேவையானவை:

கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பட்டை - 1 துண்டு
மிளகு - 4
காபி தயாரிப்பதற்கு தேவையானவை:
மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து அரைத்த பொடி - 2 டீஸ்பூன்
பால் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பால், தண்ணீர், அரைத்த பொடி மூன்றையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதை அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கலக்கவும்.

காபி கலக்கும் கப்பில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு காபி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அதனுடன் கொதிக்க வைத்த பாலையும் சேர்த்துக் கலக்கினால், ‘மசாலா காபி’ ரெடி. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!