நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருமண மேடையில் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ.......

"புது" மனைவியின் இந்த செயலை கண்டு கோபமடையும் மணமகன், மணமகளின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார்.


 இந்தியாவில் "திருமண சீசன்" விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் வழியாக திருமணம் தொடர்பான இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் திருமண விழாக்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றும் பாரம்பரியமான சடங்குகளின் அழகை காட்டும் வீடியோக்களும், போட்டோக்களும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும், ஒரு திருமண விழாவில் கலந்தது கொண்ட விருந்தினர்களால் பகிரப்படும் எல்லா வீடியோக்களுமே மற்றும் எல்லா புகைப்படங்களுமே நம் மனதைக் கவருவதில்லை, எல்லாமே வேடிக்கையானவைகளாக இருப்பதில்லை. சில நேரங்களில் சில சங்கடமான திருமண நிகழ்வுகளின் வீடியோ கிளிப்புகளும் ஆன்லைனில் வெளியாகி வைரல் ஆகின்றன.

அப்படியாக மணமேடையில் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்து கொள்ளும் ஒரு வீடியோ கிளிப், தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவின் தொடக்கத்திலேயே மணமகள் மணமகனுக்கு இனிப்புகளை வழங்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது, ஆனால் மணமகனோ தன் மனைவி மீதும் அவர் வழங்கும் இனிப்பின் மீது கவனம் செலுத்துவதை விட அதை அவர் உண்ணும் போது அது சரியாக புகைப்படம் எடுக்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து புகைப்பட கலைஞரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார், கொடுக்கப்படும் இனிப்பை புறக்கணித்து கொண்டே இருக்கிறார். மணமகனுக்கு பலமுறை இனிப்பு வழங்க முயற்சித்த பிறகு, மணமகள் தன் பொறுமையை இழந்து தன் கையில் இருக்கும் இனிப்பை மணமகனின் முகத்தில் வைத்து தேய்த்து விடுகிறார்.




"புது" மனைவியின் இந்த செயலை கண்டு கோபமடையும் மணமகன், மணமகளின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். உடனே பதிலுக்கு மணமகளும் கணவனின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். இப்படியாக இவ்விருவரும் மாற்றி மாற்றி 3 முறை தத்தம் கன்னங்களில் அறை வாங்கி கொண்டனர். பிறகு அவர்கள் கைகலப்பில் ஈடுபட தொடங்குகின்றனர், அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், இதை பிரபல நகைச்சுவை நடிகர் ஆன சுனில் குரோவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், குறிப்பிட்ட வீடியோ உண்மையான சம்பவம் அல்ல என்று தெரியவந்துள்ளது. இது ஒரு 'ஸ்க்ரிப்ட்ட' யூட்யூப் வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்ட ஒரு கிளிப் ஆகும்.

இதுவொரு ஸ்கிரிப்டட் வீடியோ என்றாலும் கூட இது இணையத்தில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. இது 3.9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் நாடு முழுவதிலுமிருந்தும் பல இண்டர்நெட் யூசர்கள் இந்த வீடியோவிற்கு பல வகையான பெருங்களிப்புடைய கமெண்ட்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அதில் இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவரின் "முதல் இரவுக்கு முன் முதல் சண்டை" என்கிற கமெண்ட் - ஹைலைட்!




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!