நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘பீர்' - எங்கு தெரியுமா?

 NEWBrew என்கிற நிறுவனம் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் வடிகட்டப்பட்ட தண்ணீரிலிருந்து பீரை தயாரிக்கிறது. இதனை "பசுமையான பீர்" என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.


தண்ணீரை சேமிப்பதில் சிங்கப்பூர் ஒரு முன்னோடி நாடாகும். அரசும் சரி, அங்கிருக்கும் நிறுவனங்களும் சரி தண்ணீரை சேமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

அப்படி, சிங்கப்பூர் மதுபான ஆலை ஒன்று சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பீர் தயார் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது நகைச்சுவை அல்ல! உண்மையிலேயே NEWBrew என்கிற நிறுவனம் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு, சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் வடிகட்டப்பட்ட தண்ணீரிலிருந்து பீரை தயாரிக்கிறது. இதனை "பசுமையான பீர்" என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பீர் தயாரிப்பதற்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுவதாலும், 90 சதவீத பானத்தில் H20 இருப்பதாலும், அதற்கு மாற்றாக இந்த மறுசுழற்சி முறையை அந்நிறுவனம் கடைப்பிடித்திருக்கிறது.


சிங்கப்பூர் நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த மறுசுழற்சி பீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை நிரூபிக்கப் பல சோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது. 95 சதவீதம் Tropical Blonde Ale” சுத்திகரிக்கப்பட்டு "அதி சுத்தமான" நீராக மாற்றுகிறது.
ஏற்கனவே, சிங்கப்பூரில் உள்ள குடிநீர் வாரியம் பல ஆண்டுகளாகக் கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக மாற்றும் பணியை நீண்ட நாட்களாகச் செய்து கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரின் சிறப்பு, கிராஃப்ட் பீர் (Craft beer) நிறுவனம், இந்த பீர் “வறுக்கப்பட்ட தேன் போன்ற சுவை” கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூரின் நீர் ஏஜென்சியின் கூற்றுப்படி, மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் இப்போது சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. இந்த எண்ணிக்கை 2060க்குள் 55 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!