நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலையில் குடிக்க வேண்டிய அருமையான பானம்! கொழுப்பை கடகடவென கரைக்கும் அற்புதம்......

 பொதுவாக ஓமம் சமையலுக்கு மட்டுமன்றி , சில வீட்டு வீட்டு வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. பெரும்பாலும் ஓமம் தண்ணீர் மருந்து கடைகளில் வாங்கிதான் கொடுப்பார்கள்.

ஆனால் அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் குடிக்கலாம்.

அந்தவயைில் தற்போது எந்தெந்த பிரச்னைகளுக்கெல்லாம் குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்

ஓமம் - 1 tsp


தண்ணீர் - 500 ml


எலுமிச்சை - 1


மஞ்சள் தூள் - 1 tsp


கருப்பு உப்பு - தேவையான அளவு


தேன் - 1 tsp    


செய்முறை

ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வேண்டும்.

கொதித்ததும் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் எலுமிச்சை, மஞ்சள் தூள், கருப்பு உப்பு, தேன் ஆகியவற்றை கலந்து குடிக்க வேண்டும்.  

நன்மை என்ன?   

 சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும். கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

நுரையீரலை சுத்தப்படுத்தவும், தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்னைக்கு ஓமம் நிவாரணியாக இருக்கிறது.


வயிற்று வலி, இரப்பைக் குடல் பிரச்னைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒமம் நீரானது குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

முடக்கு வாதம், அழற்சி நோய் போன்ற பிரச்னைகளுக்கும் ஓமம் உதவுகிறது.

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் உதவுகிறது. இது விரைவில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  



ALSO READ : மண மணக்கும் ‘மசாலா காபி’


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!