நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Bilateral Microstomia: அரிய நோயால் நிரந்திர புன்னகையுடன் பிறந்த குழந்தை

 உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...  


  • Bilateral Microstomia என்னும் அரிய நோய்.
  • உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது.
  • எனது கர்ப்ப காலம் முழுவதும் நான் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன் என்கிறார் தாய்.
உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...  வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சமீபகாலமாக அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் காணப்படும் அந்த குழந்தை,   பிறவிக் கோளாறு காரணமாக, முகத்தில் புன்னகை நிரந்திரமாகி விட்டது. இந்த பெண் குழந்தை டிசம்பர் 2021ல் பிறந்தது. அதன் பெயர் அய்லா சமர் முச்சா இந்த குழந்தை பைலேடர்ல் மைக்ரோஸ்டோமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் குழந்தை அபூர்வ பிறவி குறைபாடுடன் பிறந்துள்ளது. இது மிகவும் அரிதான நோயாகும். இது முக அழகையும் வாயின் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

இந்த நோயால், சிறுமியின் முகத்தின் அமைப்பு, குழந்தை எப்போதும் புன்னகையுடன் இருப்பது போல் தெரிகிறது. 

இந்த ஆபூர்வமான நோய் குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், குழந்தைக்கு அரிய நோய் பற்றி கர்ப்ப காலத்திலேயே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இருப்பினும் எனக்கும் என் கணவருக்கு இது பற்றி எதுவுமே தெரியவில்லை. மேலும் இதுபோன்ற ஒரு கோளாறால் பாதிக்கப்பட்ட எந்த குழந்தையையும் இது வரை நாங்கள் பார்த்தே இல்லை. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.
அய்லாவின் பெற்றோர் குழந்தைக்கு சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசி வருகின்றனர். அய்லா வளரும்போது அவளது முகமும் வாயும் சரியாக செயல்படுவதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

2007 ஆம் ஆண்டு Cleft Palate-Craniofacial Journal நடத்திய மருத்துவ ஆய்வில், உலகம் முழுவதும் 14  குழ்ந்தைகளுக்கு மட்டுமே இந்த நோய் இருப்பதாக பதிவாகியுள்ளது ஆனால் ஃபிளிண்டர்ஸ் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் முதல் முறையாக இந்த நோய் பாதிப்பை கண்டறிந்ததாக கூறுகின்றனர்.

"ஒரு தாயாக, நன் கர்ப்ப காலத்தில் நான் எங்கே தவறு செய்தேனா என நினைத்து நினைத்து பார்க்கிறேன். அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. குறிப்பாக எனது முழு கர்ப்பம் முழுவதும் நான் மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இது பெற்றோர்களின் தவறின் காரணமாக ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தம்பதியினரை சமாதானப்படுத்தினர்.








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!