நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆக்ரோஷமாக போட்டு தாக்கிய அழகிய மயில்...இளம் பெண்ணுக்கு சரியான பாடம் புகட்டிய காட்சி

 முட்டைகளை திருட நினைத்த பெண்ணுக்கு பாடம் புகட்டிய மயிலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குழந்தைக்கு ஒன்று என்றால் யாரையும் எதிர்க்க துணியும் பண்பு மனிதர்களுக்கு மட்டும் இல்லை, புவியில் வாழும் அனைத்து உயிருக்கும் ஒன்று தான்.

இதற்கு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயிலின் வீடியோவும்  சான்றாகும்.

அடைகாக்கும் தாய் மயிலை தூக்கி வீசி விட்டு பெண் ஒருவர் முட்டைகளை திருட முயல்வதை  வீடியோவில் காணலாம்.



இதற்குப் பிறகு, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை பார்த்தால், உங்களுக்கு வியப்பு மேலிடும். தாய் மயில் அந்தப் பெண்ணுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளது.



ALSO READ : ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!