நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க... எடை கட கடனு குறையும் அதிசயம் நடக்கும்!

ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.
ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.

ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.

எடையைக் குறைக்க எப்படி உதவும்?
நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.

 உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது.

இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகளும் எடையை குறைக்க விரும்பினால் மருத்துவ ஆலோசனையுடன் அச்சமின்றி ஆப்பிள் சீடர் வினிகரை இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் எடுத்து கொள்ளலாம்.

 சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது.

இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இன்சுனில் உணர்திறனை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
நல்ல தூக்கம் கிடைக்கும்
தூக்கமின்மை பிரச்சனையானது உடல் பருமன் மற்றும் எரிச்சல் போன்வற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.

எனவே இனி தூங்கும் முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை பருகுங்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!