நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியர்களுக்கு ஆக்சிஜன் வாங்குங்கள்.. பிஎம் கேர்ஸ்-க்கு 50000 டாலர் நன்கொடை - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்

ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என பேட் கம்மின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வடஇந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைநகர் டெல்லியே தவித்தது. தனியார் மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்ற வாயிலை தட்டியது.

ஆக்சிஜன் இல்லையென்றால் இங்கு நோயாளிகளின் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. தயவு செய்து மத்திய அரசை ஆக்சிஜனை வழங்கச் சொல்லுங்கள் என நீதிமன்றத்தில் மன்றாடியது. மக்களுக்கு தேவையானதை வழங்குவது அரசின் கடமை. நீங்கள் திருடுவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, கடன்வாங்குவீர்களோ அது தெரியாது. மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக சாடியது. இந்தியாவின் நிலை அறிந்து உலக நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ஆக்சிஜனை வாங்கி சப்ளை செய்வதற்காக, பிரதமர் கேர்ஸ்-க்கு 50,000 டாலரை நன்கொடையாக வழங்குவதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய மக்களிடம் இருக்கு அன்பும் கனிவும் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் நடக்கலாமா கூடாது என விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த கடுமையான ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும்.

இந்தியாவுக்கு இது கடுமையான காலம்தான். இந்திய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக 50000 டாலர்களை பிரதமர் கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்குகிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!