நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோடையை விரட்ட ‘பசுமை தோட்டம்’

கோடை வெயில் உச்சத்துக்கு ஏறிவருகிறது. பசுமையாகச் சிறிய நிழல் கிடைத்தாலும் மனம் குதூகலிக்கிறது. இந்த வெயிலைச் சமாளிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மண் பானைத் தண்ணீர், கூழ் என உணவு முறையையும் மாற்றிப் பார்க்கலாம். அதுபோல வீட்டுக்குள் குளிர்ச்சியாகச் சிறு தாவரங்களை வளர்க்கலாம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.
மணி பிளாண்ட்

பலவிதமான செடிகள் சந்தையில் கிடைக்கின்றன. மணி பிளாண்ட், அவற்றுள் ஒன்று. வீட்டில் உள்ள காற்றைச் சுத்தமாக்க இந்தச் செடி உதவுவதாகச் சொல்லப்படுகிறது. மணி பிளாண்ட், பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இப்போது உலகத்தில் பல நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது வெறும் தண்ணீரில் வளரக்கூடியது.

சீன மூங்கில்

சீன மூங்கில் என அழைக்கப்படும் இது பார்ப்பதற்கு மூங்கிலைப் போல் இருக்கும். ஆனால் இதற்கும் மூங்கிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு அதிர்ஷ்ட மூங்கில் என்ற பெயரும் உண்டு.

சைங்கோனியம் பிங்க்

சைங்கோனியம் பிங்க் எனப்படும் இந்தச் செடி குரோட்டன் செடியைப் போல் இருக்கும். இது லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வீட்டுக்குள் வளர்க்கும் செடியாக உள்ளது. இது மண்ணில் வளரக்கூடியது. அதேபோல் இதற்கு நேரடியாக சூரிய வெளிச்சமும் அவசியமல்ல. இதன் இலைகள் இளஞ் சிவப்பு நிறத்திலிருக்கும்.

ஜேடு பிளாண்ட்

தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி, தடிமனான இலைகளைக் கொண்டது. இந்தச் செடியும் மண்ணில் வளரக்கூடியது. நேரடியான சூரிய வெளிச்சம் தேவை இல்லை. அதனால் இந்தச் செடியை வீட்டுக்குள் வளர்க்கலாம்.

அரக்கா பனை

தென்னை மரத்தைப் போன்று உள்ள இந்தச் செடி வீட்டுக்குள் வளர்க்கும் செடியில் மிகப் பிரபலமானது. இதன் பூர்வீகம் மடகாஸ்கர். ஆனால், அந்தமான் பகுதிகளிலும் இது காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குட்டைத் தென்னையைப் போல் 4,5 அடிகள் வளரக் கூடும். அதனால் பெரிய தொட்டியில் வளர்க்க வேண்டும். இதன் விலை மற்ற மேஜைத் தொட்டிச் செடிகளைக் காட்டிலும் சற்று அதிகம்.

பீஸ் லில்லி

அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி அழகாக வெள்ளை நிறத்தில் வளரக் கூடியது. அதனால் இது அமைதி லில்லி (Peace lilly) என அழைக்கப்படுகிறது. இது மேஜைத் தொட்டிச் செடிதான்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!