நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

7 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின

தமிழிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் முதல் முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையான இன்று அமலுக்கு வந்தது. ஏற்கனவே கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த 7 மாதங்களுக்கு முன்பு தொடர் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் இன்று (ஒருநாள் மட்டும்) மீண்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 
முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகத்தில் நேற்றிரவு 10 மணிக்கு இரவு ஊரடங்கு தொடங்கியது. அதிகாலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி வரை அமலில் இருக்கும். எனவே தமிழகத்தில் 30 மணி நேர தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!