நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இது ஒன்று இருந்தா போதும்... எப்படி பட்ட மருவும் மூன்றே நாட்களில் உதிரும்... இதோ சிறந்த டிப்ஸ்!!!

ஒவ்வொரு பெண்களுக்கும் தங்களின் அழகை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஆனால் சிலருக்கு முகம் மற்றும் கழுத்தில் மரு இருப்பது மிக பெரிய பிரச்சனை. இனிமேல் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இதை மட்டும் செய்தால் எப்படிப்பட்ட மருவும் உதிரும். கழுத்து, முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் மரு இருந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்துகிறதா? இனி அந்த கவலையை விடுங்க. உங்களுக்காக எளிய டிப்ஸ். உங்களுக்கு அம்மன் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் போன்ற வெண்மையான திரவம் வரும்.
அதனை மருவின் மேல் தடவினால் நான்கு நாட்களில் மரு உதிர்ந்து விடும். உங்களுக்கு இந்த மூலிகை கிடைக்காமல் போனாலும் கவலை வேண்டாம்.

உங்கள் ஊர் நாட்டு மருந்து கடையில் அம்மான் பச்சரிசி இலை பவுடர் கிடைக்கும். அருகில் உள்ள மருந்து கடையில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் வாங்கி வந்து உள்ளங்கையில் சிறிது பவுடருடன் இரண்டு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் இல் உள்ள திரவத்தை நன்றாக கலந்து மரு உள்ள இடங்களில் தடவி வந்தால் மூன்றே நாளில் மரு கொட்டிவிடும். இது நன்றாக வேலை செய்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!