நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாவரங்களுடன் கூடிய கண்ணாடிக் கூண்டை முகக்கவசமாக மாற்றிய நபர்

 கொரோனாவைத் தடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கூண்டு முகக்கவசம் மூலமாக, சுற்றுச்சூழல் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பெல்ஜியத்தை சேர்ந்த நபர்.

பெல்ஜியத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அந்நாட்டு அரசு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதைத் தடுக்க முகக்கவசமாக வித்தியாசமான ஒரு பொருளை வடிவமைத்துள்ளார், சமூக ஆர்வலரான ALAIN VERSCHUEREN. பெல்ஜியம் தலைநகரான Brussels சாலைகளில் வித்தியாசமான முறையில் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.



தன்னைத்தானே காத்துக் கொள்வதற்காக, கண்ணாடி கூண்டு ஒன்றை வடிவமைத்துள்ளார் இவர். PORTABLE OASIS என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தில், நறுமணத் தாவரங்களை வளர்த்துள்ள அவர், இதன்மூலம் இயற்கையான காற்று தனக்கு கிடைப்பதாகத் கூறுகிறார். வழக்கமான முகக்கவசத்தை காட்டிலும், இந்த முகக்கவசத்தை அணிந்தால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு குறைவதாகக் கூறும் அவர், பொதுமக்களின் நேரடித் தொடர்பை முற்றிலும் துண்டிக்கும் வகையில் இந்த முகக்கவசத்தை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கமான முகக்கவசத்தை பயன்படுத்தும்போது, சில நேரங்களில் மூச்சு விட சிரமம் ஏற்படும் நிலையில், தான் தயாரித்துள்ள இந்த முகக்கவசத்தை பயன்படுத்தினால் எந்த வித சிரமமும் இல்லாமல் இயற்கையான காற்றை சுவாசிக்கலாம் எனக் கூறி அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளார்.


ALSO READ : வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜை பாஸ்ட் பார்வேர்டு செய்யும் ஆப்சன் - விரைவில் அறிமுகம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!