நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Covid-19: தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது கட்டாயம் இதை பின்பற்றுங்கள் - மும்பை டாக்டரின் வைரல் வீடியோ

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி 16-ம் தேதியில் இருந்து முன்னுரிமையின் அடிப்படையில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின். இதில் கோவேக்சின் என்பது உள்நாட்டு தயாரிப்பாகும். பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து கோவேக்சின் தயாரித்து வழங்குகிறது. மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முன்பை காட்டிலும் இப்போது ஆர்வமாக உள்ளனர். கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு படையெடுக்கும் மக்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் சுகாதார பணியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பையைச் சேர்ந்த மருத்துவர் துஷார் ஷா ட்விட்டரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கையில் பதாகையை ஏந்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பதாகையில் , “ கொரோனா தடுப்பூசி மையங்களில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள் உங்களுக்கு தடுப்பூசியை வழங்குகிறார்கள். அந்த மையங்களில் குவியும் மக்கள் வைரஸை தருகிறார்கள். கொரோனா தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசியை மட்டுமே பெற்றுச்செல்லுங்கள். வைரஸை அல்ல. இதனை எப்படி செய்வது.? இரண்டு மாஸ்க்-களை அணிந்துச்செல்லுங்கள். எப்போதும் மாஸ்க் உடனே இருங்கள். கையுறை அணிந்து செல்லுங்கள் இதன்மூலம் முகத்தை தொடுதல், கைக் கொடுப்பதை தவிர்க்கலாம். சானிடைசரை கொண்டு கைகளை கழுவுங்கள். யாருடனும் பேசாதீர்கள்” என அந்த வீடியோவில் கூறுகிறார்.

மேலும், வீட்டில் இருந்து செல்லும்போதே டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குடித்துவிட்டு செல்லுங்கள். கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று அங்கு சாப்பிடுவதை தவிருங்கள். வரிசையில் நிற்கும் போதோ அல்லது தடுப்பூசி மையங்களிலோ உணவு, தண்ணீரை கூட அருந்தாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் மாஸ்கை கழற்ற வேண்டாம்” என அறிவுறுத்திகிறார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!