நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் உதவி -அமெரிக்கா உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன்


வாஷிங்டன்:

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைப்புகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏராளமான நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர். 

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் துணை நிற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

‘இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இந்திய மக்களுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் ஆதரவை விரைவாக வழங்குவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடும் இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவை வழங்குவோம்’ என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உறுதி அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!