தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
சீனாவில் சர்வ சாதாரணமாக ரயிலில் பயணம் செய்யும் கால்நடைகள்-வைரலாகும் வீடியோ!
- Get link
- Other Apps
சீனாவில் ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் மக்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலில் ஒரு அசாதாரண காட்சி காணப்பட்டது. பயணிகள் ரயிலில் கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தான் அது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தெற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் ஒரு ரயில் மக்கள் பயணித்து கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சர்வசாதாரணமாக கால்நடைகள் வேகமாக ஏறி நடந்து செல்வதை காண முடிகிறது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்(South China Morning Post) பகிர்ந்த இந்த வீடியோவில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் பக்ஸியோங்கில் (Puxiong) இருந்து பன்ஜிஹுவா(Panzhihua)- வுக்கு செல்வதற்காக செம்மறி ஆடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் குறிப்பிட்ட ரயிலில் முண்டியடித்து கொண்டு பெட்டிகளுக்குள் ஏறி வந்தன. ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியதும் வழியில் நின்று கொண்டிருக்கும் சில பயணிகள் பொறுமையாக அவற்றிற்கு வழிவிட்டனர். இதனால் கால்நடைகள் சீட்களுக்கு நடுவே இருக்கும் ரயிலின் இடைவெளியில் உலா வருவதை காணலாம். ஒரு சில பயணிகள் பேச்சு மற்றும் வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் இருந்ததால் தாங்கள் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியுள்ளதை கவனிக்கவில்லை.
இந்த வினோத சம்பவம் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள சவுத் சீனா மார்னிங் போஸ்ட், இந்த காட்சிகள் ‘வறுமை ஒழிப்பு குறைந்த வேக ரயிலில்’ படம் பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரயில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற நகரங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது.மேலும் ரயிலில் ஏறிய ஆடுகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளூர் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் "இந்த பயணிகள் தங்கள் இருக்கைகளைத் தேடுகிறார்களா? "என்று கால்நடைகளை குறிப்பிட்டுள்ளனர்.ஏறக்குறைய 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கிளிப்பில், கால்நடைகள் ட்ரெயின் கார்ஸ் (train cars)வழியே நடந்து செல்வதைக் காணலாம்.
9 மணி நேரம் மற்றும் 353 கி.மீ நீடிக்கும் இந்த வறுமை ஒழிப்பு ரயில் பயணத்தில் விவசாயிகள் சிச்சுவான் மாகாணத்தை கடந்து செல்வதால், இந்த ரயிலிலும் ரயில் நிற்கும் இடங்களிலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்கலாம். குறைந்தபட்ச மலிவான ரயில் டிக்கெட்டுகளின் விலை 2 யுவான் (30 அமெரிக்க சென்ட்) மட்டுமே என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த அசாதாரண பயணிகள் ரயிலில் பயணிக்கும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. ஒரு சில நெட்டிசன்கள் மனிதர்கள் ரயிலில் கால்நடைகளை ஏற்றுவது போல, கால்நடை ரயிலில் மனிதர்களை ஏற்றினால் என்ன ஆகும் என்று வேடிக்கையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
- Get link
- Other Apps
Popular posts from this blog
மாணவர்களும்...சமுதாய தொண்டும்...
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment