தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
சீனாவில் சர்வ சாதாரணமாக ரயிலில் பயணம் செய்யும் கால்நடைகள்-வைரலாகும் வீடியோ!
- Get link
- X
- Other Apps
சீனாவில் ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் மக்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலில் ஒரு அசாதாரண காட்சி காணப்பட்டது. பயணிகள் ரயிலில் கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தான் அது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தெற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் ஒரு ரயில் மக்கள் பயணித்து கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சர்வசாதாரணமாக கால்நடைகள் வேகமாக ஏறி நடந்து செல்வதை காண முடிகிறது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்(South China Morning Post) பகிர்ந்த இந்த வீடியோவில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் பக்ஸியோங்கில் (Puxiong) இருந்து பன்ஜிஹுவா(Panzhihua)- வுக்கு செல்வதற்காக செம்மறி ஆடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் குறிப்பிட்ட ரயிலில் முண்டியடித்து கொண்டு பெட்டிகளுக்குள் ஏறி வந்தன. ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியதும் வழியில் நின்று கொண்டிருக்கும் சில பயணிகள் பொறுமையாக அவற்றிற்கு வழிவிட்டனர். இதனால் கால்நடைகள் சீட்களுக்கு நடுவே இருக்கும் ரயிலின் இடைவெளியில் உலா வருவதை காணலாம். ஒரு சில பயணிகள் பேச்சு மற்றும் வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் இருந்ததால் தாங்கள் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியினுள் கால்நடைகள் ஏறியுள்ளதை கவனிக்கவில்லை.
இந்த வினோத சம்பவம் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள சவுத் சீனா மார்னிங் போஸ்ட், இந்த காட்சிகள் ‘வறுமை ஒழிப்பு குறைந்த வேக ரயிலில்’ படம் பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரயில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற நகரங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது.மேலும் ரயிலில் ஏறிய ஆடுகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளூர் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் "இந்த பயணிகள் தங்கள் இருக்கைகளைத் தேடுகிறார்களா? "என்று கால்நடைகளை குறிப்பிட்டுள்ளனர்.ஏறக்குறைய 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கிளிப்பில், கால்நடைகள் ட்ரெயின் கார்ஸ் (train cars)வழியே நடந்து செல்வதைக் காணலாம்.
9 மணி நேரம் மற்றும் 353 கி.மீ நீடிக்கும் இந்த வறுமை ஒழிப்பு ரயில் பயணத்தில் விவசாயிகள் சிச்சுவான் மாகாணத்தை கடந்து செல்வதால், இந்த ரயிலிலும் ரயில் நிற்கும் இடங்களிலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்கலாம். குறைந்தபட்ச மலிவான ரயில் டிக்கெட்டுகளின் விலை 2 யுவான் (30 அமெரிக்க சென்ட்) மட்டுமே என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த அசாதாரண பயணிகள் ரயிலில் பயணிக்கும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. ஒரு சில நெட்டிசன்கள் மனிதர்கள் ரயிலில் கால்நடைகளை ஏற்றுவது போல, கால்நடை ரயிலில் மனிதர்களை ஏற்றினால் என்ன ஆகும் என்று வேடிக்கையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...

Comments
Post a Comment