நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மார்ச் மாதம் முதல் கொரோனா மீண்டும் தாக்கத்தொடங்கியது ஏன்?

மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று இந்தியாவில் மீண்டும் தாக்கத்தொடங்கியது ஏன் என்பதை சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு நடத்திய செரோ ஆய்வு முடிவு அம்பலப்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சம் தொட்டது. அக்டோபர் மாதம் தொற்று பரவல் குறையத்தொடங்கியது. ஆனால் இப்போது கடந்த மார்ச் மாதம் இதன் இரண்டாவது அலை வந்து எழுச்சி பெறத்தொடங்கி உள்ளது. தற்போது தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணிதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையொட்டி சி.எஸ். ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் செரோ சர்வே நடத்தியது. செரோ சர்வேயில், கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததா என்பதை, அவர்களது உடலில் உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) மூலம் அறியலாம். இந்த செரோ சர்வேயை சி.எஸ்.ஐ.ஆர். தனது 40 ஆய்வகங்களில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தக்கூடிய பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 17 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் எடுத்துள்ளது. 10 ஆயிரத்து 427 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

செரோ சர்வேயில் 10 ஆயிரத்து 427 பேரில் பாதிப்பு விகித சராசரி 10.14 சதவீதம் என தெரிய வந்துள்ளது. கடந்த செப்டம்பரில் கொரோனா தொற்று குறைவதற்கு காரணம் இதுதான் என கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அதனால் உருவாகக்கூடிய நோய் எதிர்ப்புப்பொருளானது 5 அல்லது 6 மாதங்களுக்கு உடலில் தங்கி இருக்கும். அது கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும்.5 அல்லது 5 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு பொருள் கணிசமாக குறைந்து விடுகிறபோது மக்கள் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிறார்கள்.

இந்த செரோ சர்வேயில், 5 அல்லது 6 மாதங்களுக்கு பிறகு ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு பொருள் செயல்பாடு இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதன் காரணமாகத்தான் மார்ச் மாதம் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் தொடங்கி இருக்கலாம் என்று ஆய்வினை நடத்தியவர்களில் ஒருவரான சாந்தனு செங்குப்தா கூறி உள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!