நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம்; அரசு அறிவிப்பு

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீப நாட்களாக 3 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதனால், மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவர்கள் வீட்டில் மற்ற உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் சூழலில் மற்றவர்களும் கூட முக கவசம் அணிவது அவசியம் என்று கூறினார்.

இதேபோன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவசரகால சூழலில், கொரோனா தடுப்பூசிகளை போடும் வேகம் சரிந்து விட நாம் விட்டுவிட கூடாது. உண்மையில், தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம், பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஆம். மாதவிடாய் காலத்திலும் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம். தடுப்பூசி போடுவது தள்ளிப்போடப்பட கூடாது என கூறிய அவர், தொலைதூர மருத்துவ சேவைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை அவர் கேட்டு கொண்டார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!