நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகள் நல்லது.? அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் என்ன ??????

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகள் நல்லது.? அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் என்ன என்பதை பற்றி காணலாம்.

கர்ப்பமடைந்த பெண்கள் அந்த காலத்தில் மிகவும் கவனமுடன் ஒவ்வொரு விஷியத்திலும் இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வயிற்றில் வளரும் அந்த சின்ன சுசுவிற்கு எந்த ஒரு துன்பமும் வராமல் காத்து கொள்ளவேண்டியது உங்களது முக்கிய கடமை அல்லவா.இதற்கு நீங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி வைத்திருக்க வேண்டுமல்லவா.. அதனால் தான் உங்களுக்காக இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தண்ணீர்:

நாம் அனைவரும் தண்ணீர் என்று எப்பொழுதும் அலட்சியம் கொள்ள வேண்டாம்.

தண்ணீர் கூட நம் உடலிற்கு மருந்து தான். நாம் தினமும் குடிப்பது தான் தண்ணீர் என்றாலும் கூட இதனை கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இது உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.மேலும் சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது. நீங்கள் கண்டிப்பாக தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உங்களுக்கு புத்துணர்வை அளிப்பதில் மிகச்சிறந்தது. இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் "சி" ஆனது உங்களது உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவியாக உள்ளது. மேலும் இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.

இளநீர்:

இளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இளநீரில் அருந்துவதால் எண்ணிலடங்காத நன்மைகள் உண்டாகின்றன. இதில் பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் பாதுக்காக்கிறது.

மோர்;

பால் பொருளான இந்த மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் குழந்தையின் எலும்புகள் வழுவாக மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இந்த மோரை பருக வேண்டியது அவசியமாகும்.

கேரட் ஜூஸ்:

கர்ப்ப காலத்தில் குடிப்பது மிகமிக நல்லது. இது உங்களது உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடியது உடல் சோர்வை போக்கும்.

ஆரஞ்சு பழம்:

சிட்ரஸ் வகை பழமாகும். இதில் அதிகளவு விட்டமின் சி அடங்கியுள்ளது. நீங்கள் பிரஸ் ஆன ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

ஆப்பிள் ஜூஸ்:

நல்ல சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆப்பிள் உங்களது உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.

காய்கறிகள்:

உங்களது ஊட்டச்சத்து தேவையை காய்கறிகளை தவிர வேறு எதனாலும் ஈடுகட்ட முடியாது. ப்ரோகோலி, முட்டைக்கோஸ் போன்ற ஜூஸ் வகைகளை நீங்கள் பருகலாம். போலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

வெள்ளரிக்காய்:

உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. மேலும் இது சுவையானதும் கூட.. எனவே நீங்கள் வெள்ளரிக்காய் ஜூஸை பருகுவது மிகவும் சிறந்ததாகும்.

பால்:

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். தினமும் இரவு உறங்கும் முன்னர் பால் அருந்துவதால் நன்றாக தூக்கம் வரும். மேலும் பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது.

தயிர்:

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து வாருங்கள்.

பீன்ஸ்:

பீன்ஸில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகையான பீன்ஸிலும் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் எனர்ஜியைக் கொடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பருப்பு வகைகள்:

பருப்புக்களை அன்றாடம் கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அளவு புரோட்டீனானது கிடைக்கும். எனவே உணவில் பருப்பு வகைகளை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.

தேங்காய்:

தேங்காயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். மேலும் இந்திய மூட நம்பிக்கைகளின் படி கர்ப்பிணிகள் தேங்காய் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்குமாம்.

வாழைப்பழம்:

கர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைப்பதுடன், உடலில் நார்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து, குடலியக்கம் சீராக செயல்படும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!