நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வாய்வழி மருந்து - நம்பிக்கையூட்டும் புதிய தகவல்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
கொரோனா தொற்று நோயை தடுக்க ஊசிக்குப் பதிலாக, வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகள் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை சிறந்த பலன் தரும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் நோய் பரவல் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பீதி அடைந்த நிலையில் தற்போது அதன் உற்பத்தி மற்றும் வினியோக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதைப்போல தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி உயிர்ப்பலியை குறைக்கிறது என்பதால் உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கொரோனாவில் இருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று இருந்த நிலையில் தற்போது ஒரு மாற்றாக வாய்வழி மருந்து கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்துள்ளன.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனம்தான் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சரியாக நடந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாய் வழியாக உட்கொள்ளும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் இந்த மருந்தை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘‘ரெம்டெசிவிர்’’ என்கிற மருந்தும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!