தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
காதலின் நினைவு.. லவ் லாக்கை உடைக்க 10,000 கிமீ பயணம் மேற்கொண்ட பெண்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
லவ் லாக் செய்வதன் மூலம் தங்களது காதலை யாராலும் உடைக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை.
காதல் என்ற வார்த்தையே ஒரு அழகான கவிதைதான்... காதல் சிலருக்கு கைக்கூடியிருக்கும். பலருக்கும் அது பசுமரத்தாணி போல் மனதில் புதைந்திருக்கும். அந்தக்கவிதையை திரும்ப திரும்ப புரட்ட நினைப்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்வின் கசப்பான பக்கமாக அதை கடந்துவிட நினைப்பவர்களும் இருக்கிறார்கள். கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலின் அடிச்சுவடு கூட இருக்கக்கூடாது என 10,000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு தன் காதலின் அடையாளத்தை உடைத்துவிட்டு சென்றுள்ளார். காதல் பூட்டு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கிந்திய நாடுகளில் இந்த காதல் பூட்டு மிகவும் பிரபலம்.
மேலைநாடுகளில் இதை லவ் லாக் என்று அழைக்கின்றனர். காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த லவ் லாக் செய்கின்றனர். நம்மூரில் சுற்றுலா தளங்களுக்கெல்லாம் சென்று பார்த்தால் சுவர்களில், பாறைகளில் காதலர்கள் தங்களது பெயர்களை பதித்து அம்பு விட்டு இருப்பார்கள். வெளிநாட்டு காதலர்கள் அங்குள்ள பாலங்கள், வேலி போன்ற பொதுஇடத்தில் ஒரு பூட்டை வாங்கி பூட்டுவார்கள். அந்தப்பூட்டில் இவர்களது பெயரோ அல்லது முதல் எழுத்தையோ அடையாளத்துக்காக பதிவிடுவார்கள். இவ்வாறு பாலங்கள் மீது பூட்டை பூட்டிய பின்னர் அந்த சாவியை தூக்கி எறிந்துவிடுவார்கள். தங்களது காதலை யாராலும் உடைக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை. சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
கலிபோர்னியாவை சேர்ந்த Kassie Yeung என்ற 23வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. காதலர்களாக இருந்தபோது அந்தப்பெண் தனது காதலருடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உயரமான டவர் மீது இவர்கள் லவ் லாக் செய்துள்ளனர்.
காதல் முறிவு ஏற்பட்டதன் காரணமாக அந்த லவ் லாக்-யை உடைக்க வேண்டும் என கலிபோர்னியாவில் இருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியாவின் தலைநகருக்கு வந்ததிலிருந்து அந்த உயரமான டவரை அடைந்து லவ் லாக்-கை உடைத்தது வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
தலைநகர் சியோலை வந்தடைந்தது. நேராக ஒரு கடைக்கு சென்று லவ் லாக்கை உடைப்பதற்கான கருவியை வாங்குகிறார். அந்த கருவியுடன் தனது பயணத்தை தொடங்குகிறார். ஒருவழியாக அந்த உயரமான டவரை அடைந்துவிட்டார். ஆனால் இங்குதான் அவருக்கு சிக்கல் காத்திருந்தது. அந்த டவர் முழுவதும் பல வண்ணங்களில் பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தது. எத்தனையோ காதலர்கள் அந்த டவரில் லவ் லாக் செய்திருந்தனர். அத்தனை பூட்டுகளுக்கும் மத்தியில் அவர் பூட்டிய பூட்டை கண்டுபிடித்து அதனை துண்டித்துவிட்டார். பூட்டை கண்டுபிடித்ததும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். தனது கடந்த கால காதல் வாழ்க்கையில் இருந்து விடுபடுவதற்காக இவ்வாறு அவர் செய்துள்ளார்.
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோரு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள். அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது,
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுக
Comments
Post a Comment