Posts

Showing posts from April, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூண்டு, கிரீன் டீ… சுவாசப் பிரச்னை வராது; இந்த சிம்பிள் உணவுகளை தவிர்க்காதீங்க!

Image
உடல் ஆரோக்கியத்தை இந்த நாட்களில் பேண உங்கள் உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில சத்தான உணவுப் பொருட்கள் . கொரோனா தொற்று அச்சம் நீடித்து வருவதால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரவிருக்கும் மாதங்கள் கடினமாக இருக்கும். எனவே அவர்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும். உடல் ஆரோக்கியத்தை இந்த நாட்களில் பேண உங்கள் உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில சத்தான உணவுப் பொருட்கள் இங்கே பரிந்துரை செய்துள்ளோம். இந்த உணவுகள் உங்கள் சுவாச கோளாறு களுக்கு தீர்வு தருகின்றன. ஆப்பிள் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் ஆப்பிள்கள் மிகச் சரியான உணவாக இருக்கும். இவை ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறலுக்கு உதவுகின்றன. மேலும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, புற்றுநோய்கள், இருதய நோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தையும் ஆப்பிள் குறைக்கிறது. காஃபி மூச்சுக்குழாய்களை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு பொருள் காஃபி ஆகும்.காஃபியால் நுரையீரலுக்கு தேவையான அதிகபட்ச காற்றை உள்ள

இனிப்பான எறும்பும், ஆண்டெனா தொடர்பும்..!

Image
எறும்புகள், பூமியில் மிக நீண்ட காலம் வாழும் பூச்சிகளில் ஒன்றாகும். 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் உணர்வு கொம்புகளான ஆண்டெனாவை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொண்டு தொடர்பு கொள்கின்றன. பிற எறும்புகள் தங்களை பின்பற்றுவதற்கு ஒருவித ரசாயனங்களை தடத்தில் விட்டு செல்கின்றன. மற்ற எறும்புகள் இந்த தடத்தை பின்பற்றியே வரிசையாக ஊர்ந்து செல்கின்றன. சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர்வாழும். இங்கிலாந்து ஆய்வுப்படி கருப்பு பெண் எறும்பு பல ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன. தேனீக்களை போலவே எறும்பு கூட்டத்திற்கும் ஒரு ராணி எறும்பு உண்டு. அதுவே அதிகாரம் நிறைந்தது. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும், மற்றொன்று ஏனைய எறும்புகளுக்காகவும் நிரப்பப்படுகிறது. எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 அங் குலம் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன. எறும்புகள் எப்போதும் தன

வரலாறு வானில் பறக்கும் பலூன்களின் வண்ணமயமான கதை

Image
பலூன்கள் நவீன கண்டுபிடிப்பு போல நமக்கு தோன்றலாம், ஆனால் அவை பல நூற்றாண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. முதல் ரப்பர் பலூனை ‘மைக்கேல் பாரடே’, 1824-ல் கண்டுபிடித்தார். அவர் லண்டனில் உள்ள ‘ராயல் இன்ஸ்டிடியூட்டில்’ தமது ஹைட்ரஜன் பரிசோதனையில் அவற்றைப் பயன்படுத்தினார். இதே ரப்பர் பலூனை ஒரு வருடம் கழித்து அதாவது 1825-ம் ஆண்டில் அந்நாளில் முன்னோடி ரப்பர் உற்பத்தியாளரான ‘தாமஸ் ஹான்காக்’ என்பவர் பாட்டிலில் இணைக்கும் படியான சுருங்கி விரியும் சிரன்ஞ் போல் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தார். 1847-ல் லண்டனில் முதன்முறையாக ‘லேடக்ஸ்’ பலூன்களை இங்க்ராம் என்பவர் தயாரித்து வெளியிட்டார். ஆனாலும் அவரால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பெரிய அளவில் உற்பத்தியை பெருக்கமுடியவில்லை. 1970-ம் ஆண்டில் ஃபாயில் பலூன்கள் வெளிவந்தன. அவற்றின் விலை அதிகமாக இருந்தாலும், ரப்பர் மற்றும் ‘லேடக்ஸ்’ பலூன்களை விட அதிகமாக காற்று அல்லது வாயுவை தன்னுள் புகுத்தக் கூடிய வகையில் அமைந்திருந்தது. மேலும் அவை இலகுவாகவும் இருந்தது இன்று, பலூன்கள் ரப்பர், லேடக்ஸ் அல்லது நைலான் துணி ஆகியவற்றில் தயார் செய்யப்படுகின்றன. மேலு

கொரோனா விவகாரம்: இந்தியாவுக்கு உதவ தயார்: சீன அதிபர் ஜி ஜிங்பிங்

Image
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. பெய்ஜிங் , கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டு இருப்பதாவது:-    கொரோனா எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜிங்பிங் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  Also read :  COVID-19 Vaccine | ஆய்வில் ஆறுதல்: கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மூலம் தொற்றுப் பரவுவது குறைவு

மே தின வாழ்த்துக்கள்

Image
உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் ரூ.185 கோடி ஈட்டிய சீன நடிகை! விசாரணையை முடுக்கிய அரசு

Image
  கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் சினிமா தொழில் அதிகளவிலான இழப்பை சந்தித்து வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் OTT, டிவி என சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த உச்ச நடிகை ஜெங் ஷுவாங் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் 185 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.  ஒரு ஆண்டு முழுவதும் பிஸியாக நடித்தால் தான் இந்த தொகையை ஹாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர்கள் ஈட்ட முடியும். அதற்கு நிகரான வருமானத்தை வெறும் 77 நாட்களில் ஒரு டிவி ஷோவில் நடித்து ஈட்டியுள்ளார் ஜெங் ஷுவாங்.  இது தொடர்பாக அதிக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும்  Weibo போஸ்டில் பதிவு செய்துள்ளார்  ஜெங் ஷுவாங்.  also read :   “ஊழியர்கள் ஆண்டுக்கு 4 முறை அலுவலகம் வந்தால் போதும்!” - ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனம்

அறியப்படாத படிப்புகளை பற்றி அறிந்து கொள்வோமா..?

Image
  பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை கற்று தேர்ந்து வேலை கிடைப்பதற்கான போட்டா போட்டியில் இருந்து விடுபட்டு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி சம்பாதிக்கலாம். அத்தகைய படிப்புகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... * உணவு தொழில்நுட்பம்: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளின் தன்மையை மதிப்பீடு செய்யும் படிப்பு இது. உணவை பதப்படுத்துதல், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல், பாதுகாப்பான முறையில் சேகரித்து வைத்தல், வினியோகம் செய்தல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். படிப்பை முடித்த பின்பு உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், ஓட்டல்கள், குளிர்பான தொழிற் சாலைகள், அரிசி ஆலைகள், மதுபான தொழிற் சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம். * பால் தொழில்நுட்பம்: ‘டெய்ரி டெக்னாலஜி’ எனப்படும் இது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்ட படிப்பாக பார்க்கப்படுகிறது. பால் பொருட் களின் உற்பத்தி, தர பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற தொழில்நுட்பங்களை உள

10 நிமிட பயிற்சி தரும் பலன்கள்

Image
  உடற்பயிற்சி மீது போதிய ஆர்வம் செலுத்தாதவர்கள் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு உடற் பயிற்சிக்கு சிறிது நேரத்தையாவது ஒதுக்குவதற்கு முனைப்பு காட்டுகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நரம்புகள், தசைகள், மூட்டுகளுக்கு ஆரோக்கியம் தரும் பயிற்சிகளும் இருக்கின்றன. அவற்றை செய்வதற்கு 10 நிமிடங்களே போதுமானது. ஸ்குவார்ட்ஸ்: இது எளிமையான உடற்பயிற்சி வகையை சேர்ந்தது. நேராக நிமிர்ந்து நின்று கால்களை சற்று அகலமாக விரித்து வைத்துக்கொள்ளவும். இரு கைகளையும் முன்னோக்கி நீட்டியபடி குனிந்து எழுந்து பயிற்சியை தொடரவும். அப்போது முழங்கால்களை சரியான கோணத்தில் வைத்திருக்க வேண்டும். குனிந்து எழுந்தபடி சரியான சமநிலையில் பயிற்சி செய்து வந்தால் தசைகள் வலுப்படும். மூட்டு பகுதியும் வலுவடையும். கழுத்து பயிற்சி: முதுகை நேராக நிமிர்த்தியபடி நாற்காலியில் உட் காருங்கள். தாடை பகுதியை மேல்நோக்கி உயர்த்தியபடி கழுத்தை தோள் பட்டையை நோக்கி மெதுவாக திருப்புங்கள். ஓரளவு திரும்பியதும் அதே நிலையில் 10 விநாடிகள் வைத்திருங்கள். பின்னர் கழுத்தை மெதுவாக திருப்பி இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள். நேரம் கிட

உங்கள் வயிற்றில் வளர்வது பெண்ணா? ஆணா? முன்னோர்கள் கணித்த அறிகுறிகள்

Image
  ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில்  வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்பதை நம்முடைய முன்னோர்கள் சில அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார்கள். அவை என்னவென்று இங்கே பார்போம்.  ஆண் குழந்தையாக இருந்தால் > புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். > முகத்தில் பருக்கள் (Pimples) அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை > காலைவேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால்.  > கர்ப்பிணிகளின் (Pregnancy) வயிறு கீழே இறங்கி இருத்தால்.  > பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும். > கர்ப்பகாலத்தில் பெண்களின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். பெண் குழந்தையாக இருந்தால் > வயிறு உயரமா

“ஊழியர்கள் ஆண்டுக்கு 4 முறை அலுவலகம் வந்தால் போதும்!” - ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனம்

Image
  கொரோனா தொற்றின் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய சொல்லியது. குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்கள் Work From Home பாலிசியை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு வரும் மென்பொருள் நிறுவனமான Atlassian தங்கள் ஊழியர்கள் ஆண்டுக்கு நான்கு முறை அலுவலகம் வந்தால் போதும் என தெரிவித்துள்ளது.  “டீம் Anywhere என்ற கொள்கையின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளோம். எங்களது நிறுவனம் சர்வதேச நிறுவனமாகும். அதனால் பணியாளர்களின் திறனானது உலகின் எந்த இடத்தில் அவர்கள் இருந்தாலும் வெளிப்படும் என்பதை திடமாக நம்புகிறோம். சிலிக்கான் வேலியில் இருந்து தான் இந்த பணிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கருதுகிறோம். அதனால் உலகின் எந்தபகுதியில் இருந்தும் எங்கள் ஊழியர்கள் பணியாற்றலாம். ஆண்டுக்கு நான்கு முறை மட்டும் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திற்கு அவர்கள் வருகை தந்தால் போதும்” என சொல்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஃபர்குவார்.  இப்போது அந்த

Oldest living person : அமெரிக்காவில் வசிக்கும் 114 வயதான பெண்மணி - வயதில் மூத்தவர் என பெருமை!

Image
  கொரோனா வைரஸ் மிகவும் அச்சுறுத்தி வந்த அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 114 வயதான பெண்மணி, தற்போது அந்த நாட்டின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவில் வசிப்பவர்களில் மிகவும் வயதில் மூத்தவர் என்ற பெருமைக்கு 114 வயதான பெண்மணி தெல்மா சுட்கிளிஃப் (Thelma Sutcliffe ) சொந்தக்காரராகியிருக்கிறார். கொரோனா வைரஸ் மிகவும் அச்சுறுத்தி வந்த அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 114 வயதான பெண்மணி, தற்போது அந்த நாட்டின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். தெல்மா சுட்கிளிஃப் (Thelma Sutcliffe ) என்ற பெண்மணி அமெரிக்காவின் அதிக வயதான பெண்மணி என்பதுடன், உலகில் வாழும் 7வது அதிக வயது நபராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் நெபராஸ்கா (Nebraska) நகரில் உள்ள ஒமாகா பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள மூத்த குடிமக்கள் வசிக்கும் ஹோம் ஒன்றில் இருக்கும் அவருக்கு தற்போது 114 வயதாகிறது. வடக்கு கரோலினா பகுதியில் வசித்து வந்த ஹெஸ்டர் போர்டு என்ற பெண்மணி அந்நாட்டின் அதிக வயதான பெண் என்ற பெருமையுடன் இருந்தார். ஏப்ரல் 17 ஆம் தேதி அவர் இறந்ததால், அந்த பெருமை தெல்மாவுக்கு தற்போது கிட

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்

Image
பீகாரில் தனது 7 ஆண்டு கால மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்து கணவர் கண் கலங்கி நின்றது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பாட்னா, பீகாரின் சுல்தான்கஞ்ச் நகரில் வசித்து வருபவர் உத்தம் மண்டல். இவர் ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த சப்னா குமாரி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அமைதியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்வில் உறவினர் வடிவில் புயல் வீச தொடங்கியது. அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை சப்னா சந்தித்து உள்ளார். சந்தித்த வேளையில் தனது கணவர், குழந்தைகளை பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. அவற்றை எல்லாம் மறந்து விட்டு ராஜூ மீது சப்னாவுக்கு காதல் வந்துள்ளது. இந்த விவகாரம் உத்தமுக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சப்னாவின் பெற்றோர், உற்றார் கூட சப்னாவை பேசி வழிக்கு கொண்டு வர முயற்சித்தனர். ஆனால், சப்னா தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இறுதியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்

தொற்று அபாயங்களை குறைக்க வருங்காலத்தில் AC-க்களில் ரேடியன்ட் கூலிங் சிஸ்டம் வர வாய்ப்பு..

Image
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள 60 நகரங்களில் ஏர் கண்டிஷனிங் தேவைகளை கணக்கிட்டது. ஏசி-க்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டல் பேனல்களின் (chilled panels) புதிய அமைப்பு காற்று சீரமைப்பை மாற்றக்கூடியது, உட்புற நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. கோவிட் -19 காரணமாக பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடப்பதால் கூடுதல் காற்றோட்டம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள 60 நகரங்களில் ஏர் கண்டிஷனிங் தேவைகளை கணக்கிட்டது. அவர்கள் ஆற்றல் செலவுகளை( energy costs) அவற்றின் குளிரூட்டும் முறையுடன் குளிர்ந்த பேனல்கள் மற்றும் இயற்கை காற்றோட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒப்பிட்டனர். இதில் அப்ளைடு எனர்ஜியின் கோவிட் -19 பதிப்பில் வெளியிடப்பட்ட முடிவுகள் மாற்று தீர்வு தேவையான ஆற்றலில் 45% வரை சேமிக்க முடியும் என்பதை காட்டியது. அதே நேரத்தில் கட்டிடக் குடியிருப்பாளர்கள் வசதியாக இருப்பதையும்,

டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் பேஸ்புக் - புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!

Image
சீனாவுடனான எல்லைப் பகுதி மோதலுக்குப் பிறகு, டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் அதனைப் போலவே உருவாக்கப்பட்ட மற்ற செயலிகள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றன. டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் இணையவழியில் நேரலை குழு உரையாடலை மேற்கொள்ளும் செயலியை பேஸ்புக் நிறுவனமும் உருவாக்கி வருகிறது. குறுகிய வடிவிலான வீடியோ ப்ளாட்பார்ம் கொடிகட்டிப் பறந்த நிலையில், தற்போது சமூகவலைதளங்களில் ஆடியோ ப்ளாட்பார்ம் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட வீடியோ தளங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக, இந்தியாவில் டிக் டாக் பயனாளர்கள் இல்லை என்ற சூழல் கூட உருவானது. சீனாவுடனான எல்லைப் பகுதி மோதலுக்குப் பிறகு, டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் அதனைப் போலவே உருவாக்கப்பட்ட மற்ற செயலிகள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது சமூகவலைதளங்களில் ஆடியோ தளம் டிரெண்டிங்காக மாறியுள்ளது. வீடியோ தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும், கருத்து சொல்பவரின் அடையாளமும் அறிந்து கொள்ளப்படும் நிலை இருப்பதால், நெட்டிசன்களின் பார்வை ஆடியோ தளங்கள் மீது திரும்பியிருக்

பழைய புகைப்படங்களை அப்படியே புதிது போல மாற்றும் புதிய AI டெக்னாலஜி: ஐ.ஐ.டி மெட்ராஸ் குழுவின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Image
ராஜ்கோபாலனின் பட செயலாக்கம் மற்றும் கணினி பார்வை ஆய்வகத்தில் இந்த சீரழிந்த படங்களை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தியுள்ளனர். ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தி, வானிலை காரணமாக சேதமடைந்த சி.சி.டி.வி படங்களை அதன் அங்கீகாரம் தாண்டி அதனை மீட்டெடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். IEEE இதழில் வெளியான அறிக்கையின்படி, ஐ.ஐ.டி மெட்ராஸில் மின் பொறியியல் துறையின் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஏ.என். ராஜகோபாலன் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவருக்கு, ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த மைத்ரேயா சுய்ன் மற்றும் குல்தீப் புரோஹித் ஆகியோர் உதவினர். மேற்கூறிய நிறுவனத்தில் ராஜ்கோபாலனின் பட செயலாக்கம் மற்றும் கணினி பார்வை ஆய்வகத்தில் இந்த சீரழிந்த படங்களை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சக்தியைப் பயன்படுத்தியுள்ளனர். மழை-கோடுகள், மழைத்துளிகள், மூடுபனி மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட சி.சி.ட

COVID-19 Vaccine | ஆய்வில் ஆறுதல்: கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மூலம் தொற்றுப் பரவுவது குறைவு

Image
பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா வாக்சின் அல்லது தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் மூலம் அடுத்தடுத்து தொற்றுப் பரவுவது குறைந்துள்ளதாக பிரிட்டன் சுகாதார அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆறுதல் தகவல் வெளியாகியுள்ளது. பைஸர், அஸ்ட்ராஜெனிகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களால் பிறருக்கு கரோனா பரவுவது 50%க்கும் மேலாகத் தடுக்கப்படுகிறது. இது நல்ல அறிகுறி. இந்த மருத்துவப் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பும் மரண விகிதமும் உச்சம்: இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனாவில் 3645 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,04,832 ஆக அதிகரித்துள்ள

இந்தியாவுக்கு உதவும் அமேசான் - 100 வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்ய முடிவு!

Image
குறிப்பாக, நாட்டின் தலைநகரமான டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவுகிறது. கோவிட் வைரஸ் பாதிப்பால் தத்தளிக்கும் 100 வென்டிலேட்டர்களை இறக்குமதி செய்ய உள்ளதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, நாட்டின் தலைநகரமான டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவுகிறது. அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களும் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், தங்களது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுவர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் போக்க சிங்கப்பூர், சவ

விழிப்புணர்வு தேவை: கொரோனாவுக்காக மருத்துவமனை சென்றால் கிட்னியை எடுத்து விடுவார்கள்: உ.பி. கிராம மக்களின் அச்சம்

Image
கொரோனா வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கிட்னியை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடத்தில் உள்ளது. எனவே கொரோனா நோய், சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இயக்கம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கொரோனா சிகிச்சை பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் உத்தரப் பிரதேசத்தின் சில கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர், கொரோனா வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கிட்னியை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடத்தில் உள்ளது. எனவே கொரோனா நோய், சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இயக்கம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கிட்னி திருடி விடுவார்கள் என்ற அச்சத்தினால் கொரோனா பரிசோதனைகளைக் கூட சில கிராம மக்கள் தவிர்த்து வருவதாக முன்னணி ஆங்கில ஊடகம் அங்கு நேரில் சென்று சேகரித்த விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதாப்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் இந்தர்பால் பாசி என்பவர் இந்த கிராமத்தில் ஒவ்வொரு 2வது வீட்டிலும் காய்ச்சல் வருகிறது, காய்ச்சலினால் இறக்கின்றனர் என்றார். ஆனால் தானோ தன் உறவினர்களோ கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் மேலும், அவ

பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி:

Image
பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி: திப்பிலி ஒரு மூலிகைத் தாவரமாகும். திப்பிலியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலில் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. ⚡திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும். ⚡பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாயுத்தொல்லை நீங்கும். ⚡திப்பிலியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அதில் அரை கிராம் எடுத்து தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கமறல், பசியின்மை குணமாகும். ⚡தோல் நீக்கிய சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவை குணம

வாயு கோளாறுகளை சரி செய்யும் பிண்ணாக்கு கீரை:

Image
வாயு கோளாறுகளை சரி செய்யும் பிண்ணாக்கு கீரை: சாப்பிடும் அனைத்து கீரைகளிலும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அதில் பல கீரைகள் நமது கிராமப்புரங்களில் கிடைக்கிறது. அதில் ஒன்று தான் பிண்ணாக்கு கீரை. குணப்படுத்தும் நோய்கள்: வாதம் பிரச்சனை, சிறுநீரகங்கள், நோய் எதிர்ப்பு, நீரிழிவு நோய், கல்லீரல், செரிமான பிரச்சனை, விஷகடி, புற்றுநோய். கல்லீரல் பிரச்சனை: அதிகமாக போதை பழக்கம் உள்ளவர்களுக்கும், தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கும் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனை தடுப்பதற்கு இக்கீரை மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதலில் போதை பழக்கம் மற்றும் நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தவிர்த்து விட்டு இக்கீரை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோய்: பிண்ணாக்கு கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக சிக்கிரமாக குறைத்து விடும். தினமும் சாப்பிடாவிட்டாலும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை சாப்பிட்டால் மட்டுமே உடனடி தீர்வு கிடைக்கும். நோய் எதிர்ப்பு: நாம் வளர வளர நம்முடைய நோய் எதிர

க்ரூப் வீடியோ கால் வசதி வெளியீட்டு விவரங்களை வழங்கிய டெலிகிராம் சிஇஒ

Image
டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ கால் அம்சம் எப்போது வழங்கப்படும் என அதன் சிஇஒ தெரிவித்து இருக்கிறார். 2020 ஆண்டு வீடியோ கால் சேவைக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு குருந்தகவல் சேவை வழங்கும் செயலிகளில் வீடியோ கால் சேவையை அறிமுகம் செய்வதும், அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்த துவங்கின. தற்போது டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வீடியோ கால் வசதியை வழங்க இருக்கிறது. இத்துடன் ஸ்கிரீன்-ஷேரிங், என்க்ரிப்ஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. டெலிகிராம் சிஇஒ மற்றும் நிறுவனர் பவெல் துரோவ், வாய்ஸ் சாட் அம்சத்துடன் வீடியோ கால் சேவையை மே மாத வாக்கில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மற்ற வீடியோ கால் சேவைகளை போன்றே டெலிகிராம் சேவையிலும் வீடியோ கால் அம்சம் ஸ்கிரீன் ஷேரிங், என்க்ரிப்ஷன், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் டெலிகிராம் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட் சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. Also read :  ஹூலா ஹூப்பிங்கில் புதிய கின்னஸ்

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜிடபிள் அடை

Image
நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும். தேவையான பொருள்கள் துருவிய கேரட் - அரை கப் கோஸ் - அரை கப் சோம்பு - 1 டீஸ்பூன் ஓட்ஸ் - 1 கப் பச்சை மிளகாய் - 2 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்தபின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும். ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன. Als

கோடை காலத்தில் அம்மை நோய் அதிகமாக பரவ காரணமும், தீர்வும்

Image
அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இருவகைப்படும். வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ். சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடிய

அவ்ளோ விட்டமின் இருக்கு… இனி இதை தூக்கி எறியும் முன் கொஞ்சம் யோசிங்க!

Image
ஆரஞ்சி தோல் முழுவதும் வைட்டமின் பி 6, கால்சியம், புரோவிட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. உலகளவில் பிரபலமானது ஆரஞ்சுப் பழம். குளிர்காலத்தில் மக்களுக்கு பிடித்த பழங்களுள் ஆரஞ்சும் ஒன்று. சிட்ரஸ் அமிலம் செறிந்துள்ள இந்த ஆரஞ்சுப் பழம், அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், ஆரஞ்சுப் பழத்தின் தோல் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆரஞ்சு தோல்களில் பல ஆரோக்கியமான சத்துகள் நமக்காக காத்திருக்கின்றன. நீங்கள் ஆரஞ்சுப் பழத் தோலின் நன்மைகளை அறிந்து, அதனை உட்கொள்ள வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை இங்கே படிக்கலாம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இருப்பினும், அதன் தோலில், வைட்டமின் சி, நார்ச்சத்துகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற தாவர சேர்மங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது, இதய ஆரோக்கியத்திற்கும், செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்வதை ஊக்குவிக்கும். ஆரஞ்சு தோலில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன், அல்சைமர் நோய் மற்றும் வகை

இந்தியாவில் இருந்து கிளம்புவது நல்லது; குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

Image
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வாஷிங்டன், இந்தியாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகின்றன. கடந்த 5ந்தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன்பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்க அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு பயண கால எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு நல்லது என தெரிவித்து உள்ளது. இந்தியாவில் மருத்துவ உதவி பெறுவது கடுமையாக உள்ளது. வரைமுறைக்கு உட்பட்டே சிகிச்சை கிடைத்து வருகிறது. அதனால் கிடைக்கும் போக்குவரத்

சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை காதல்

Image
சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தீராத காதல் கொண்டு உள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ்,  ஹாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டவர் ஆவார். இந்த படங்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன. அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி, அன் புரோக்கன், பை தி சீ, பர்ஸ்ட் தே கில்டு மை பாதர் போன்ற படங்களை அவர் இயக்கியும் பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் எல்லோருக்கும் தெரியாத ஒரு ரகசியம், அவர் சொகுசு கார்கள் மீது தீராத காதல் கொண்டிருப்பதுதான். பி.எம்.டபிள்யு ஹைட்ரஜன் 7, ரேஞ்ச் ரோவர் ரோக், லெக்சஸ் எல்எஸ் 460 எப், ஜாகுவார் எக்ஸ் ஜே, கேடிலேக் எஸ்கலேட் இஎஸ்வி போன்ற சொகுசு கார்களை அவர் வாங்கிக்குவித்து இருக்கிறார். இதுபற்றிய ரகசியங்கள் கசிந்து அவரது ர

தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் - புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது

Image
அதிக எண்ணிக்கையிலான தொற்று கொண்டிருக்கும் மாவட்டங்களில் உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்தவகையில் மே மாதத்துக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொற்று சாத்திய விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்கள் அல்லது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் காண வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கொண்டிருக்கும் மாவட்டங்களில் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலைமை மதிப்பீட்டின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 25-ந் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளபடி, கட்டுப்பாட்டு ந

அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு ‘ஆயுஷ்-64’ மருந்து பயனுள்ளது - மத்திய அரசு தகவல்

Image
அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது. ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இணைந்தது ‘ஆயுஷ்’ துறை ஆகும். மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கென தனி அமைச்சகம் உள்ளது. அந்த அமைச்சகத்தின் தலைமை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் சோப்ரா நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 1980-ம் ஆண்டு, மலேரியாவை குணப்படுத்துவதற்கு என ‘ஆயுஷ்-64’ என்ற மருந்து உருவாக்கப்பட்டது. அந்த மருந்து, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமா என்று 3 மையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், வார்தாவில் உள்ள தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிலையம், மும்பையில் உள்ள மாநகராட்சி கொரோனா மையம் ஆகிய மையங்களில் தலா 70 நோயாளிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், வழக்கமான கவனிப்புடன் ‘ஆயுஷ்-64’ மருந்தை கொடுத்தால், அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கொரோனா பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்

அதிமதுரம் கஷாயம்: கொரோனாவிலிருந்து உங்களை காக்கும், பிற ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்

Image
 ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஏராளமான மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களையும் (வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்) தினமும் உட்கொண்டு வருகின்றனர். மேலும் மஞ்சள் கலந்த பால், துளசி கஷாயம் போன்ற ஆயுர்வேத வைத்தியங்களும் பின்பற்றப்படுகின்றன.  இந்த பதிவில், இயற்கை மூலிகையான அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வித கஷாயத்தைப் பற்றி கூறுகிறோம். இது உங்களது நோயெதிர்ப்பு சக்தியை (Immunity) வலிமையாக்குவதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிக்கின்றது.  ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாத

COVID 19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வசிக்க பாதுகாப்பான best நாடு இதுதான்!!

Image
 கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. சில நாடுகளில் மெதுவாக இந்த தொற்றின் பிடி தளர்ந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்றின் இரண்டாவது மூன்றாவது அலைகள் மக்களுக்கிடையே பீதியை கிளப்பி வருகின்றன. இந்த நிலையில், 'கொரோனா தொற்றே (Coronavirus) இல்லாத ஒரு இடம் உண்டா? இந்த அச்சம் இல்லாமல் வாழ ஒரு இடம் கிடைக்குமா?' என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கும். உங்களுக்குள்ளும் அப்படிப்பட்ட கேள்வி இருந்தால், அதற்கான விடை இதோ உள்ளது. COVID-19 தொற்றுநோய் காலத்தில் பூமியில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர் !! கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்ப

இந்தியாவுக்கு உதவ கொரோனா நிவாரண நிதி திரட்டும் சிங்கப்பூரின் வர்த்தக அமைப்புகள்

Image
  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவும் நோக்கத்துடன் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகின்றன சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக அமைப்புகள்.   சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (SICCI), லிட்டில் இந்தியா வணிகர்கள் மற்றும் மற்றும் பாரம்பரிய சங்கத்தினர் இணைந்து இந்த நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி நிதி திரட்டும் பணியை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.  “வரலாறு காணாத இந்த துயரமான நேரத்தில் இந்தியாவின் பக்கம் நாங்கள் நிற்க விரும்புகிறோம். அவசர தேவைக்கு உதவும் நோக்கில் இந்த நிதி திரட்டப்படுகிறது. சிங்கப்பூர் வாழ் மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என வணிகர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா PM-CARES நிதிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்து உதவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ALSO R

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!