நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Hacking-ல் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 3 வழிகள்.......

 ஸ்மார்ட்போன்களை ஹேக்கிங்கில் இருந்து பாதுகாக்க 3 எளிமையான வழிகளை பின்பற்ற வேண்டும்.


மினி கம்யூட்டர்போல் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் அனைத்து முக்கியமான தகவல்களும் கையடக்க கருவியான ஸ்மார்ட்போன்களிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன. எப்போதும் போன் கையிலேயே இருப்பதால், தகவல் திருட்டு பிரச்சனை இருக்காது. கம்யூட்டர் உள்ளிட்டவைகளில் தகவல்களை சேமித்து வைக்கும்போது பிறர் அதனை ஓபன் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

ஆனால், ஸ்மார்ட்போன்களில் அத்தகைய பிரச்சனைகள் இல்லை. அதேநேரத்தில், ஹேக்கிங்கில் இருந்தும் போனை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரியமலேயே ஸ்மார்ட்போனை ஹேக்கிங் செய்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும். அந்தளவுக்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதால், அவற்றை சில விஷயங்களை அடிக்கடி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

சாப்ட்வேர் புதுப்பிப்பு

எந்தவொரு ஹேக்கிங் அல்லது மால்வேர் தாக்குதலில் இருந்து தொலைபேசியைப் பாதுகாக்க சாப்ட்வேர் (மென்பொருள்) புதுப்பிப்பு மிக அவசியம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது ஃபோனுக்கான புதுப்பிப்புகளை வெளியிடுகின்ற. அதில் ஸ்மார்ட்போன்களுக்கான பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் அந்த அப்டேட்டுகளில் இருக்கும். அதனை நாம் புறக்கணிக்காமல் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் போன் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்து கொள்ள முடியும். 

பாதுகாப்பான செயலிகள்

Play Store மற்றும் App Store-ல் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான ஆப்ஸ்கள் உள்ளன. பாதுகாப்பை மனதில் வைத்து, தரமான செயலிகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் என்கிரிப்சன் செய்யப்பட்ட செயலிகள் மட்டுமே பிளே ஸ்டோரில் இருக்கும். என்கிரிப்சன் செய்யப்பட்ட செயலிகள் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் உங்கள் சாட்டிங் தகவல்களை வேறு யாரும் அணுக முடியாது. ஆப்பிளின் iMessage மற்றும் Facebook-ன் WhatsApp ஆகியவை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆதரிக்கின்றன.

அணுகல்களை தவிர்த்தல்

உங்கள் இருப்பிடம் முதல் தொடர்புகள் வரை, உங்கள் மொபைலில் இருந்து நிறைய டேட்டாவை செயலிகள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் அனைத்து செயலிகளும் உபயோகப்படுத்துவதை அனுமதிக்க கூடாது. கேமரா மற்றும் கான்டெக்ட் தகவல்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட செயலிகள் மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும். அனைத்து டேட்டாக்களையும் கேட்கும் செயலிகள் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது சிறந்தது. தேவையற்ற செயலிகளை உங்கள் மொபைலில் இருந்து நீக்குகள். பிளே ஸ்டோர் அல்லாத பிற இடங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!