நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

150 ஆடுகள் , 300 கோழிகள் வெட்டி விடிய விடிய பிரியாணி விருந்து... ஒரே ஊரில் திரண்ட முனியாண்டி விலாஸ்கள்!

மதுரை கள்ளிக்குடி அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி, கோழிக்கறியுடன் விருந்து வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் உள்ளது. தென்னிந்திய முழுவதும் பரவியுள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டலை இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள்தான் நடத்தி வருகின்றனர். முதன் முதலில் சுப்பையா நாயுடு என்பவரால் 1937 ஆம் ஆண்டு காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து, அடையாளப்படுத்தும்விதமாக மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் தென்னாடு முழுவதும் பரவ தொடங்கியது. நாளில் விற்பனையாகும் முதல் வியாபாரத் தொகையை முனியாண்டி கோயிலுக்கு என்று ஒதுக்குவது வடக்கம்பட்டி சுற்று வட்டார மக்களின் வழக்கம். இந்த தொகையை அப்படியே எடுத்து வந்து கோயில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முனியாண்டி கோயிலில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். 86-வது ஆண்டாக நேற்று விழா தொடங்கியது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!